சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் வரும் 21ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநாடு.. கமல்ஹாசன்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் வரும் 21ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான்காவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையிலும், மக்கள் நீதி மய்யத்தின் மகத்தான தேர்தல் வெற்றிக்குக் கட்டியம் கூறும் வகையிலும் பிரம்மாண்டமான மாநாடு வரும் பிப்ரவரி 21 தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 Makkal neethi maiam party conference will be held on the 21st in Chennai

இந்த மண்ணையும், மொழியையும் மக்களையும் காக்கவே நாம் களம் இறங்கி இருக்கிறோம். இந்த மகத்தான பயணத்தில் எதுவும் நமக்குத் தடையல்ல நாம் ஒரு போதும் துவளும் படையல்ல என்பதை தமிழகத்திற்கு உணர்த்த மக்கள் நீதி மய்யத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த மாநாட்டிற்கு அணி திரள வேண்டும். உங்கள் உற்றார், உறவினர்கள், சுற்றத்தார், நண்பர்கள், ஒத்த கருத்தாளர்கள், அறம்சார் மனிதர்கள், நேர்மையாளர்கள், மக்கள் சேவகர்கள் புடை சூழ பிப்ரவரி 21ம்தேதி சென்னை நோக்கி அலை அலையாகத் திரண்டு வாருங்கள்.

அதிரடி திருப்பம்.. மத்திய அரசு உயர் பதவிகளுக்கு தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு அழைப்பு அதிரடி திருப்பம்.. மத்திய அரசு உயர் பதவிகளுக்கு தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு அழைப்பு

பழி போடும் அரசியல், பழி வாங்கும் அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு வழி தேடும் அரசியல வழிகாட்டும் அரசியலுக்கு துவக்க உரையை சேர்ந்து எழுதுவோம். ஊர் கூடி தேர் இழுத்தால் நாளை நமதே என்று கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து முக்கிய முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது என தெரிகிறது.

English summary
Makkal neethi maiam party conference will be held on the 21st in Chennai, party leader Kamal Haasan has announced.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X