உயிரோடு சிக்கியது ஆட்கொல்லி புலி.. 21 நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு சாதித்த வனத்துறை.. அடுத்து என்ன?
ஊட்டி: 21 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு T 23 புலி இன்று, மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினக்குடி, சிங்காரா வனப்பகுதியில் அடுத்தடுத்து 4 பேர் புலி தாக்கி இறந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்ட மாடுகளையும் புலி கொன்றது.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, புலியை சுட்டுப் பிடிக்க வனத் துறை முடிவு செய்தது.

சுட்டு பிடிக்க கூடாது
இந்த நிலையில், பொது நல வழக்கு ஒன்றை விசாரித்த ஹைகோர்ட் புலியை சுடக் கூடாது என உத்தரவிட்டது. ஹைகோர்ட் உத்தரவு காரணமாக புலியை மயக்க ஊசி செலுத்தி உயிரோடு பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. டி23 புலி என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த புலியை பிடிக்கும் பணியில் மோப்பநாய்களும், கும்கி யானைகளும் ஈடுபடுத்தப்பட்டன.

மயக்க ஊசி
இதற்காக வனப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. மரங்களில் பரண் அமைத்து அதில் இருந்தவாறு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மசினகுடி வனப்பகுதியில் புலியின் நடமாட்டத்தை கண்ட வனத்துறையினர் நேற்று இரவு புலிக்கு மயக்க ஊசி செலுத்தினர்.

2 ஊசிகள்
மசினகுடி - முதுமலை சாலையில் புலி நடந்து சென்றபோது கால்நடை மருத்துவக் குழு நான்கு முறை மயக்க ஊசியை செலுத்தியது. அதில், இரண்டு ஊசிகள் புலி உடம்பில் சென்று சேர்ந்தது. இந்த நிலையிலும் புலி வனப்பகுதிக்குள் அரை மயக்க நிலையில் தப்பி ஓடியது.

தப்பியோடியது புலி
மயக்க ஊசி செலுத்திய பிறகும், புலி தப்பியோடியதால் வனத் துறையினர் சோர்வடைந்தனர். இருப்பினும் புலியை அப்படியே விட்டு விட்டால் மக்களுக்கு ஆபத்து என்பதால், மீண்டும் உத்வேகத்தை வரவழைத்துக் கொண்டு, புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

கும்கி யானைகள் வருகை
21ஆவது நாளாக வனத்துறையினருக்கு T-23 புலி போக்கு காட்டி வந்தது. எனவே கும்கி யானைகளை வனத் துறையினர் வரவழைத்தனர். இந்த நிலையில்தான், மசினகுடி வன சோதனை சாவடி அருகே சாலையை புலி கடந்து சென்றது உறுதி செய்யப்பட்டது. எனவே அங்குள்ள வனப் பகுதிக்குள் வனத் துறையினர் சென்றனர். இன்று மதியம் வேளையில், மசினகுடி அருகே, மயக்க ஊசி செலுத்தப்பட்டு புலி பிடிக்கப்பட்டது. இதனால் வனத்துறையினரும், பொது மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். முதல் முறையாக ஆட்கொல்லி புலி இந்த வனப் பகுதியில் உயிரோடு பிடிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த வனப் பகுதியில் இதற்கு முன்பு இப்படியான பிரச்சினைகள் ஏற்பட்டபோது 3 புலிகள் சுட்டுதான் பிடிக்கப்பட்டனவே தவிர, உயிரோடு பிடிக்கப்படவில்லை.

அடுத்து என்ன?
குறிப்பிட்ட இந்த புலி 2012ம் ஆண்டு முதல் அந்த வனப் பகுதியில் வாழ்ந்து வந்தது. ஏதாவது சில புலிகள்தான் மனிதர்களை கொல்லும் புலியாக மாறுகிறது. இது மிகவும் அரிதானது. ஏனெனில் வனத்திற்குள், காட்டு மாடு, மான் போன்றவை இருப்பதால், அவை பெரும்பாலும் மனிதர்கள் வாழும் இடத்திற்கு இரைக்காக வருவதில்லை. ஒருவேளை இப்படி மனிதர்களை தாக்கி, அது பிடிபட்டால், வன உயிரினம் என்ற அந்தஸ்தை இழந்து விடும். பிடிபட்ட புலி முதலில் முதுமலைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்படும். அதன் பிறகு கூண்டை பயன்படுத்தி, வண்டலூர் மிருக காட்சி சாலைக்கு அனுப்பி வைக்கப்படும்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications