சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா..மனோஜ்க்காக வைரமுத்து எழுதிய அறிமுக பாடல் இதுதான்!
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் ஒரே மகன் நடிகர் மனோஜ் மறைவுக்கு ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது. பிள்ளையை பறிகொடுத்துவிட்டு முதுமையில் கதறும் இயக்குநர் இமயத்தின் உருக்குலைந்த தோற்றம் ஒவ்வொரு நெஞ்சையும் கனக்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறது.
எத்தனையோ கிராமத்து முகங்களை எல்லாம் திரைத்தாரகைகளாக்கிய திரைச்சிற்பி பாரதிராஜா தன் வாரிசான மனோஜுக்காக தாஜ்மஹால் எனும் சினிமாவை செதுக்கினார். அந்த திரைப்படத்தில் மனோஜுக்கு அறிமுக பாடலை கவிப்பேரரசுதான் எழுதி இருந்தார்.

தெக்கத்தி சீமையின் வெள்ளந்தியும் வீராப்புமான வாழ்க்கையை போகிற போக்கில் வார்த்தைகளையே 'திருப்பாச்சி' அருவாளாக வீசிவிட்டுச் சென்றிருப்பார் கவிப்பேரரசு வைரமுத்து. இன்றைய இரங்கல் பாவிலும் கூட, இந்த அறிமுகப்பாடலை நினைவு கூர்ந்திருந்தார் கவிப்பேரரசு.
தாஜ்மஹால் படத்தில் மனோஜ்-க்கு கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய அறிமுகப்பாடல்:
திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா...
திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா...
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா...
எட்டு தெச தொறந்திருக்கு எட்டு வச்சு வாடா வாடா...
எட்ட நிக்கும் சூரியன எட்டி தொடு வாடா வாடா...
போர் தானே நம்ம ஜாதி பொழுதுபோக்கு வாடா வாடா...
பூவெல்லாம் நம்ம ஊரில் புலிநகமா மாறும் வாடா...
வெள்ளாட்டு கூட்டமுன்னு வெளிய சொன்ன ஆளுகள...
வெள்ளாவியில் போட்டு வெளுத்துக்கட்டு வாடா வாடா...
எங்கூரு பொம்பளைய மோப்பமிட வந்தவன...
எங்கசியான் மூக்கறுத்தாக...
எங்காட்ட திருடி தின்னு சப்பு கொட்டி நின்னவன...
எங்காத்தா நாக்கறுத்தாக...
எங்க குறும்பாட்டு கறி கொழம்பு...
குளிதலையில் மண மணக்கும் வாசத்துக்கே எச்சிவிட்டீக...
நாங்க குளிச்சி அனுப்பி வச்ச...
கொறட்டாத்து தண்ணியில ஏண்டி அம்மா கறி சமைச்சீங்க...
அட கோம்ப மான் தோப்புல...
கொல கொலயா காய் திருடி கோவணத்த தவறவிட்டீக...
அந்த கோவணத்த கொண்டுபோய்...
அப்பனுக்கு செலவில்லாம ரிப்பனுக்கு வெட்டிகிட்டீக...
அட களவாணி கோத்திரமே காளமாட்டு...
அட களவாணி கோத்திரமே...
காளமாட்டு மூத்திரமே...
எப்ப நீங்க திருந்தப்போறீங்க...
உப்பு தின்னா தண்ணி குடி...
தப்பு செஞ்சா தலையிலடி...
பரம்பரையா எங்க கொள்கையடா...
மானம் தானே வேட்டி சட்ட...
மத்ததெல்லாம் வாழ மட்ட...
மானம் காக்க வீரம் வேணுமடா...
அட சோளக்கூழு கேட்டு வந்தா...
சோறு போட்டு விசிறிவிடும்...
ஈரமுள்ளது எங்க வம்சமடா...
சோறு போட்டு கழுத்தறுத்தா...
கூறு போட்டு பங்கு வைக்கும்...
வீரம்தானே எங்க அம்சமடா...
நாங்க வம்புச்சண்டக்கு போறதில்ல...
வந்த சண்டைய விடுவதில்ல...
வரிப்புலிதான் தோத்ததில்லையடா...
எங்க உறைய விட்டு வாள் எடுத்தா...
ரத்த ருசி காட்டி வைக்கும்...
வழக்கம் எங்க குல வழக்கமடா...
நான் தட்டி வச்சா புலி அடங்கும்...
எட்டு வச்சா மல உருகும்...
தொட்டதெல்லாம் துலங்க போகுதடா...












Click it and Unblock the Notifications