நிதானமில்லாத மனோவின் இரு மகன்கள்! என் நண்பரை கெட்ட வார்த்தையால் அழைத்து அட்டூழியம்! நண்பர்கள் பேட்டி
சென்னை: பிரபல பாடகர் மனோவின் இரு மகன்கள் உள்பட 6 பேருக்கு எந்த மாதிரியான போதை மருந்தை பயன்படுத்தினார்கள் என்று கூட தெரியவில்லை. அந்தளவுக்கு நிதானமே இல்லாமல் இருந்ததாக மனோ மகன்களால் பாதிக்கப்பட்டவரின் சகோதரர் மற்றும் நண்பர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மனோ மகனால் தாக்கப்பட்ட நபர்களின் நண்பர் மணிகண்டன் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: நாங்கள் எல்லாரும் கால்பந்து பயிற்சி மையத்தில் விளையாடிக் கொண்டிருந்தோம். சரியாக நேற்று இரவு 11.45 மணிக்கு விளையாடி முடித்துவிட்டு 7 பேர் கிளம்பினோம்.

இதனிடையே எங்களுடன் இருந்த கிருபாகரன் என்பவர் சாப்பாடு வாங்க சென்றார். அப்போது மனோவின் இரு மகன்கள் உள்பட மொத்தம் 6 பேர், கிருபாகரனை ஹேய் என்றும் உடன் கெட்ட வார்த்தையை பயன்படுத்தியும் அழைத்துள்ளனர்.
உடனே கிருபாகரன் அவர்களிடம் சென்று, "யார் நீங்கள் என்னை ஏன் தகாத வார்த்தைகளால் அழைக்கிறீர்கள்" என கேட்டுள்ளார். உடனே மனோவின் மகன், கிருபாகரனை மார்பில் எட்டி உதைத்ததில் அவர் கீழே விழுந்தார். ஏன் என்னை அடிக்கிறீர்கள் என அவர் மீண்டும் கேட்ட போது அவர்கள் அனைவரும் ஒரு ஆளை போட்டு அத்தனை அடி அடித்துள்ளனர்.
உடனே அந்த கிருபாகரன் எனக்கு போன் செய்தார். நாங்கள் எல்லாம் அந்த இடத்திற்கு போனோம். அங்கு போய் என்ன ஆச்சு, ஏன் அடிக்கிறீர்கள் என கேட்ட போது மனோவின் மகன்கள் உள்பட அனைவரும் எங்களை மாறி மாறி கற்களால் கடுமையாக தாக்கினர்.
எங்களுடன் வந்த 16 வயசு சிறுவனை முட்டி போட வைத்து உருட்டுக்கட்டையால் அடித்துள்ளனர். எங்களிடம் அதற்கான ஆதாரங்கள் எல்லாம் இருக்கிறது. பிறகு 100க்கு போன் செய்தவுடன் காவல் துறை ரோந்து வாகனம் வந்தது. அப்போது கூட எங்களை அசிங்கமாக பேசி அடித்தார்கள். நாங்கள் போலீஸாரிடம் "என்ன சார் உங்கள் முன்னாடியே இப்படி பேசுகிறார்கள். அடிக்கிறார்கள்" என கேட்டதற்கு மனோவின் மகன்கள், உங்களால் எங்களை எதுவுமே செய்ய முடியாது என கூறினர்.
பாதிக்கப்பட்ட எங்களின் செல்போன், வண்டியை போலீஸார் பறிமுதல் செய்து விட்டு அவர்களை அசால்ட்டாக அனுப்பி வைத்துவிட்டனர். அந்த 16 வயது சிறுவன் "என்னை விட்டுடுங்கள் என துடிக்கிறான்" ஆனாலும் அவர்கள் விடாமல் அடித்தனர். எந்த போதையை பயன்படுத்தினார்கள் என்று கூட எங்களுக்கு தெரியவில்லை. அவர்களில் ஒருவர் கூட நிதானமே இல்லாமல் இருந்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நடந்தது என்ன?: சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிருபாகரன் (20). இவர் தண்டையார்பேட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மதுரவாயலைச் சேர்ந்த 16 வயது ஐடிஐ படிக்கும் சிறுவனுடன் வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பம் பகுதியில் உள்ள கால பந்து பயிற்சி அகாதெமியில் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு பயிற்சி முடிந்து வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் அருகே உள்ள உணவகத்திற்கு இருவரும் உணவு வாங்கச் சென்றுள்ளனர். அப்போது அங்கு நின்ற 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கிருபாகரன், 16 வயசு சிறுவன் ஆகிய இருவரிடமும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அப்போது வாக்குவாதம் முற்றியதால் மேற்கண்ட இருவரையும் அந்த 5 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து காயமடைந்த கிருபாகரனும், 16 வயது சிறுவனும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த தாக்குதல் குறித்து கிருபாகரன் உள்பட இருவரும் போலீஸில் புகார் அளித்தனர். அப்போது விசாரணையில் தாக்குதல் நடத்திய 5 பேரில் ஒருவர் பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன் ரஃபி மனோ என்பது தெரியவந்தது. இதையடுத்து மனோவின் வீட்டிற்கு சென்ற போலீஸார் அவருடைய மகனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications