தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை.. எங்கெல்லாம் பெய்யும்..? வானிலை மையம் கணிப்பு
சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
அரபிக்கடலில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த வாரம் மேற்கு தமிழ்நாட்டிலும், கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்து வந்தது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரம் வெள்ளம் ஏற்பட்டது.
கேரளாவில் ஏற்பட்ட மழை, வெள்ளம் காரணமாக முல்லைப்பெரியாறு அணை நிரம்பி வருகிறது. இதனால் வைகை அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. அதேபோல் மேற்கு மாவட்டங்களிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

மழை
இந்த நிலையில்தான் இன்றில் இருந்து தமிழ்நாட்டில் மீண்டும் கனமழை தீவிரம் எடுக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை முடிவிற்கு வரும் நிலையில் உள்ளது. இதனால் தற்போது தென் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ஏற்ற காலநிலை உருவாகி வருவதாக வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.

அடுத்த 4 நாட்கள்
இதனால் இன்றில் இருந்து அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று 8 மாவட்டம்
அதன்படி இன்று கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, மதுரை, திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையில் இருந்து ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்யும்.

டெல்டா
டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை நாளை முதல் பெய்யும் என்று வானிலை மையம் கணித்து உள்ளது. சென்னையில் மாலை நேரத்தில் மழை தீவிரமாக பெய்ய வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி, கோவை, சேலம், மதுரை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது!












Click it and Unblock the Notifications