உறுப்பினர்கள் வரவில்லை.. தாமதம்.. குளறுபடி.. எங்கெல்லாம் தேர்தல் ஒத்திவைப்பு?
சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் தொடர்பாக பல்வேறு முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மறைமுகத் தேர்தலை, நடத்தியதே முறைகேடுகளில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை பறிக்கத்தான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்படும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். இந்த நிலையில், பல்வேறு காரணங்களால் சில ஊராட்சி ஒன்றியங்களில் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறவில்லை. அவை எந்தெந்த பகுதிகள், என்பது தொடர்பாக, நாம் இப்போது பார்க்கலாம்:

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய குழு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறவில்லை. உறுப்பினர் யாரும் வரலை என்பதால், தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றிய குழு துணை தலைவர் தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 5 ஒன்றிய உறுப்பினர் வரவில்லை என்ற காரணத்தால், துணை தலைவர் தேர்வு நடைபெறவில்லை.
திருவள்ளூர் மாவட்டத்தில், பூண்டி, திருவாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு, கே.ஆர்.பேட் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில், துணை தலைவர் தேர்தல் நடைபெறவில்லை.
தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியக் குழு துணை தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போதிய உறுப்பினர்கள் வருகை தரவில்லை என்பதற்காக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழியில், உறுப்பினர்கள் தாமதமாக வந்ததால், ஒன்றியக் குழு துணை தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
ராமநாதபுரம், பம்மனேந்தல் அதிமுக உறுப்பினர் ராஜினாமா செய்ததால், அங்கும் தேர்தல் ரத்தாகியுள்ளது. திருச்சி மாவட்டம்,
மணப்பாறை ஒன்றியக்குழு தேர்தலும், தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
-
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!











Click it and Unblock the Notifications