நான் கவுரவமான குடும்பத்தை சேர்ந்தவள்! போலீஸை தப்பா பேசினேனா? சந்திரமோகனை கோர்த்துவிட்ட மெரினா பெண்
சென்னை: ஆண் நண்பருடன் சென்னை மெரினாவில் தகராறில் ஈடுபட்ட பெண் ஜாமீன் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அவருடன் இருந்த ஆண் நண்பர் சந்திரமோகன்தான் போலீஸை தவறாக பேசியதாக தனலட்சுமி தனது ஜாமீன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள லூப் சாலையில், கடந்த 20-ம் தேதி இரவு 12 மணிக்கு சந்தேகத்திற்கிடமாக இருவர் காருடன் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்தப் பகுதியில் ரோந்து வந்த மயிலாப்பூரைச் சேர்ந்த போலீஸார் சிலம்பரசன் அவர்களை வீட்டிற்கு கிளம்புமாறு அறிவுறுத்தியுள்ளார். அப்போது அந்த இருவரும் போலீசாரை ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசி மிரட்டியுள்ளனர். மேலும் உதயநிதியை வரச்சொல்லட்டுமா என்றெல்லாம் கேட்டனர்.
இது தொடர்பாக போலீசார் எடுத்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த 21 ம் தேதி அவர்கள் இருவர் மீதும் மைலாப்பூர் காவல்துறை ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலைமிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி தனலட்சுமி என்பவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தன்னுடன் இருந்த ஆண் நண்பர் சந்திரமோகன் தான் காவல்துறையுடன் தகராறு செய்ததாகவும், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் இது தொடர்பாக மன்னிப்பு கோரியிருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் கெளரவமான குடும்ப பின்னணியை கொண்டவர் என்றும் காவல்துறை தன் மீது தவறாக வழக்குப்பதிவு செய்துள்ளதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது, அப்போது சென்னை மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி, ஜாமீன் கோரிய நபரும் அவரின் ஆண் நண்பரும் கைது செய்து 3 நாட்கள் தான் ஆகி இருப்பதாகவும், வழக்கு விசாரணையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 28-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் சந்திரமோகன், தான் போதையில் தவறாக பேசிவிட்டேன் , தன்னை மன்னித்து விடுமாறு வீடியோ வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications