அதிமுக வழக்கின் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு பின்புலத்தில் பிரதமர் மோடி.. மருது அழகுராஜ் குற்றச்சாட்டு
சென்னை: அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என சொல்ல எடப்பாடி தரப்பினருக்கு உரிமை இல்லை, நாங்கள் அதிமுக கொடியை சட்டையாகக் கூட தைத்து போட்டுக் கொள்வோம் என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி கட்சி முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் எத்தனையோ சட்ட போராட்டங்களை எடுத்தும் அது பெரும்பாலும் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கே சாதகமாக போனது.

அதிமுக பொதுக் குழு தீர்மானங்கள், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளராக தன்னை அங்கீகரித்து இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என ஓபிஎஸ் தரப்பினர் அளித்த மனுவையும் மீறி எடப்பாடியை பொதுச் செயலாளர் என தேர்தல் ஆணையம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அங்கீகரித்தது, அத்துடன் இரட்டை இலை சின்னமும் அவருக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். மேலும் அதிமுகவின் பெயரையும் கொடியையும் ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எடப்பாடி தரப்பின் மூத்த நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் திருச்சியில் நாளை ஓபிஎஸ் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் தனக்கு இருக்கும் செல்வாக்கை எடப்பாடி தரப்பினருக்கு நிரூபிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் அதிமுகவினரின் கொடியை சற்று வித்தியாசமான முறையில் பயன்படுத்தியிருந்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளரான ஜேசிடி பிரபாகர் கூறுகையில் நாங்கள்தான் உண்மையான அதிமுக. தேர்தல் ஆணையம் எடப்பாடியை அதிமுக பொதுச் செயலாளராக அறிவித்தது கர்நாடகா தேர்தலுக்காக மட்டும்தான். இன்னமும் வழக்கு நிலுவையில் இருப்பதால் எங்களை அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என அவர்கள் சொல்ல முடியாது. அப்படி நடவடிக்கை எடுத்தாலும் சட்டரீதியாக சந்திக்க தயார் என்றார்.
இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரும் ஓபிஎஸ் அணியின் மாநில செய்தித் தொடர்பாளருமான மருது அழகுராஜ், காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் அதிமுகவின் அதிபர் எடப்பாடி பழனிசாமிதான் என எந்த உரிமையும் இன்னும் அவருக்கு தரவில்லை. அதிமுக கொடியை சட்டையாகக் கூட தைத்து போட்டுக் கொள்வோம். யாரும் கேட்க முடியாது.
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு பின்புலமாக பிரதமர் இருக்கிறார். விசாரணையின் போது எடப்பாடிக்கு எதிராக கேள்விகளை கேட்டும் நீதிபதிகள் தீர்ப்பின் போது மட்டும் எடப்பாடிக்கு தேவையான நேரத்தில் தேவையான தீர்ப்பை வழங்கும் மர்மம் என்னவென்று குழப்பமாக இருக்கிறது. இவ்வாறு மருது அழகுராஜ் தெரிவித்தார்.
-
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ?












Click it and Unblock the Notifications