அதிமுக வழக்கின் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு பின்புலத்தில் பிரதமர் மோடி.. மருது அழகுராஜ் குற்றச்சாட்டு
சென்னை: அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என சொல்ல எடப்பாடி தரப்பினருக்கு உரிமை இல்லை, நாங்கள் அதிமுக கொடியை சட்டையாகக் கூட தைத்து போட்டுக் கொள்வோம் என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி கட்சி முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் எத்தனையோ சட்ட போராட்டங்களை எடுத்தும் அது பெரும்பாலும் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கே சாதகமாக போனது.

அதிமுக பொதுக் குழு தீர்மானங்கள், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளராக தன்னை அங்கீகரித்து இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என ஓபிஎஸ் தரப்பினர் அளித்த மனுவையும் மீறி எடப்பாடியை பொதுச் செயலாளர் என தேர்தல் ஆணையம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அங்கீகரித்தது, அத்துடன் இரட்டை இலை சின்னமும் அவருக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். மேலும் அதிமுகவின் பெயரையும் கொடியையும் ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எடப்பாடி தரப்பின் மூத்த நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் திருச்சியில் நாளை ஓபிஎஸ் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் தனக்கு இருக்கும் செல்வாக்கை எடப்பாடி தரப்பினருக்கு நிரூபிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் அதிமுகவினரின் கொடியை சற்று வித்தியாசமான முறையில் பயன்படுத்தியிருந்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளரான ஜேசிடி பிரபாகர் கூறுகையில் நாங்கள்தான் உண்மையான அதிமுக. தேர்தல் ஆணையம் எடப்பாடியை அதிமுக பொதுச் செயலாளராக அறிவித்தது கர்நாடகா தேர்தலுக்காக மட்டும்தான். இன்னமும் வழக்கு நிலுவையில் இருப்பதால் எங்களை அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என அவர்கள் சொல்ல முடியாது. அப்படி நடவடிக்கை எடுத்தாலும் சட்டரீதியாக சந்திக்க தயார் என்றார்.
இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரும் ஓபிஎஸ் அணியின் மாநில செய்தித் தொடர்பாளருமான மருது அழகுராஜ், காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் அதிமுகவின் அதிபர் எடப்பாடி பழனிசாமிதான் என எந்த உரிமையும் இன்னும் அவருக்கு தரவில்லை. அதிமுக கொடியை சட்டையாகக் கூட தைத்து போட்டுக் கொள்வோம். யாரும் கேட்க முடியாது.
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு பின்புலமாக பிரதமர் இருக்கிறார். விசாரணையின் போது எடப்பாடிக்கு எதிராக கேள்விகளை கேட்டும் நீதிபதிகள் தீர்ப்பின் போது மட்டும் எடப்பாடிக்கு தேவையான நேரத்தில் தேவையான தீர்ப்பை வழங்கும் மர்மம் என்னவென்று குழப்பமாக இருக்கிறது. இவ்வாறு மருது அழகுராஜ் தெரிவித்தார்.
-
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்? இதுதான் காரணம் - எடப்பாடி சொன்ன சீக்ரெட்! -
கோவை தெற்கில் பந்தயம் அடிக்கணும்.. செந்தில் பாலாஜிக்கு வேலுமணி செக் -
எடப்பாடி பழனிசாமிக்கு 'செக்' வைக்கும் விஜய்! களமிறங்கும் ரகசிய வேட்பாளர்.. அதிர்ச்சியில் அதிமுக -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
4,379 ஓட்டு ஷாக்! விஜய பிரபாகரன் அப்போ அப்படி பேசிட்டு.. விருதுநகரில் நடந்த அந்த ரகசிய சமரசம் என்ன -
DVAC தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சந்தீப் மிட்டல் பாஜக ஆதரவாளர்.. தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் -
மதுரை வடக்கு தொகுதி.. தளபதிக்கு குடைச்சல் கொடுக்கும் சரவணன்.. தவெக பிரிக்கப் போகும் வாக்குகள்! -
மம்தாவை தூக்கி எறியும் பாஜக? ஸ்கெட்ச் போட்டு இறங்கிய அமித் ஷா.. மேற்கு வங்கத்தில் பரபர அரசியல் களம் -
சோழவந்தான் தொகுதி.. மீண்டும் உதிக்கும் உதயசூரியன்? 30 ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் சம்பவம்! -
234 தொகுதியிலும் திமுக கூட்டணிதான்.. யார் என்ன செய்தாலும் வெற்றியை தடுக்க முடியாது - ஸ்டாலின் உறுதி












Click it and Unblock the Notifications