காம்ரேடுகள் ரெடி..தமிழ்நாடே திணறப்போகுது! மத்திய அரசு,ஆளுநர்களை கண்டித்து இன்று சிபிஎம் ஆர்ப்பாட்டம்
சென்னை: மத்திய பாஜக அரசையும், ஆளுநர்களையும் கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சிகளின் மாநில, மாவட்ட தலைவர்களும் பங்கேற்க உள்ளார்கள்.
மாநில உரிமைகளுக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், ஆளுநர்கள் மூலம் மாநில அரசின் அதிகாரங்களில் தலையிட்டு வருவதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மத்திய பாஜக அரசையும், ஆளுநர்களையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இதில் கூட்டணி கட்சியினரும் திரளாக கலந்துகொள்ள உள்ளார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், "ஒன்றிய பாஜக மோடி அரசு தொடர்ந்து மாநில உரிமைகள் மீதான தாக்குதலை நடத்தி வருகிறது. பாஜக அல்லாத எதிர்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில் நிதிப் பகிர்வு உள்ளிட்ட பல அம்சங்களில் கூட்டாட்சி கோட்பாட்டிற்கு விரோதமான நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. ஆளுநர்களை பயன்படுத்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர மறுப்பது, மாநிலங்களுக்கு போதிய நிதியை ஒதுக்க மறுப்பதுடன், மாநிலங்களின் வளர்ச்சிக்கு கடன் பெறுவதற்கும் தடை விதிப்பது, அரசியல் சாசன சட்ட விழுமியங்களை காலில் போட்டு மிதிப்பது, கூட்டாட்சி தத்துவத்தை சிதைப்பது போன்ற நாசகர வேலைகளில் ஒன்றிய பாஜக அரசு செய்து வருகிறது.
குறிப்பாக, தமிழகம், கேரளம், மேற்குவங்கம், பஞ்சாப், புதுதில்லி உள்ளிட்டு பல மாநிலங்களில் ஆளுநரை பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை செயல்பட விடாமல் முடக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் ஒன்றிய அரசு தொடுத்து வரும் தாக்குதலுக்கு எதிராகவும், கேரள மாநில ஆளுநரைக் கண்டித்தும், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கும் வகையிலும் வருகிற 2024 பிப்ரவரி 8ந் தேதி அன்று புதுதில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள மாநில இடது ஜனநாயக அரசாங்கத்தின் சார்பாக முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெறுகிறது.
இப்போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் கண்டன இயக்கங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தவுள்ளது. தமிழகத்திலும் மாநில உரிமைகள் பறிப்பு, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசையும், ஆளுநர்களையும் கண்டித்து பிப்ரவரி 8, 2024 அன்று மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சிபிஐ (எம்) சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாநில, மாவட்ட தலைவர்கள், தோழமைக் கட்சியினர் திரளாக கலந்து கொள்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும், ஜனநாயக சக்திகளும் பேராதரவு தந்து ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன குரலெழுப்ப வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது." என்று குறிப்பிட்டு இருந்தார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications