Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“ஸ்டன்” ஆன எல்.முருகன்! ஸ்டாலின் பேரை சொன்னவுடன்.. மோடியின் சென்னை நிகழ்ச்சியில் அதிர்ந்த அரங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்லாவரத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உள்ள புதிய ரயில் மற்றும் சாலை போக்குவரத்து திட்டங்களின் தொடக்க விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரை உச்சரித்த உடனே அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அதிக சத்தத்தில் கரகோஷங்களை எழுப்ப பேச்சையே சில நொடிகள் நிறுத்திவிட்டு தொடர்ந்தார்.

தென் மாநிலங்களுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தெலுங்கானாவில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பின் சென்னை வந்து இருக்கிறார். சென்னை விமான நிலைய புதிய முனையம், சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

Massive claps and sounds in Modi function while L Muragan said MK Stalin name

அதை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125 வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு அவர் சிறப்புரையாற்றினார். அதை தொடர்ந்து சென்னை பல்லாரத்தில் நடைபெறும் புதிய ரயில் மற்றும் சாலை போக்குவரத்து திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்று உள்ளார்.

முதலமைச்சர் முக ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் அஷ்விணி வைஷ்ணவ், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, நெஞ்சாலைத்துறை அமைச்சர் எவ வேலு, அமைச்சர் தாமொ அன்பரசன், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலு, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். அதில் தொடக்கத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உரையாற்றினார்.

அப்போது, "மத்திய அரசாங்கத்தின் திட்டங்களை மத்திய அரசுடன் இணைந்து சீரும் சிறப்புமாக செயல்படுத்திக் கொண்டு இருக்கிற நம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களே.." என்று சொன்னவுடன் கூட்டத்தில் இருந்து கரகோஷக்குரல்கள் எழுந்தன. சில நொடிகள் நீடித்த இந்த கரகோசத்தை அமைதியாக பார்த்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இதனால் சில நொடிகள் நிறுத்திவிட்டு உரையை தொடர்ந்தார் எல்.முருகன்.

தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழ்நாட்டிற்கு வழிகாட்டிக் கொண்டு இருக்கக்கூடிய ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே என்று அவருக்கு வரவேற்பு கொடுத்தார். "சகோதரர்களே! சகோதரிகளே! இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் சென்னை ரூ.1,260 கோடிக்கான விமான நிலைய திட்டத்தையும், வந்தே பாரத் ரயில் திட்டத்தையும் கொடுத்து, இன்னும் பல திட்டங்களையும் கொடுத்துக் கொண்டு இருக்கிற பிரதமர் எப்போதும் தமிழ்நாட்டின்மீது மிகப்பெரிய பாசத்தையும் அன்பையும் வைத்து உள்ளார். எனவேதான் தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் பல்லாயிரக்கணக்கான திட்டங்களை கொடுத்து உள்ளார்." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+