சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பூமா தேவி பொங்கிவிட்டாளா.. இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. அதிர்ச்சியில் பொள்ளாச்சி மக்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    பொள்ளாச்சியில் ஏற்பட்ட புழுதி புயல்-வீடியோ

    சென்னை: பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்முறை மற்றும் மிரட்டல் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. "அண்ணா..அடிக்காதீங்கண்ணா.." என அந்த பெண்கள் கதறிய சத்தம், இன்னும் காதுகளில் எதிரொலித்துக் கொண்டுள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் இப்போது அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில், பிஸியாக இருக்கிறார்கள். அதனால் பொள்ளாச்சி விவகாரம் பெரிதாக பேசப்படாமல் இருக்கலாம்.

    ஆனால், பொள்ளாச்சியில் சமீபத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற ஒரு வினோத சம்பவம், இயற்கையின் கோபம்தானோ என்ற சந்தேகத்தை வரவழைப்பதாக உள்ளது.

    குழந்தையை பார்த்துக்கோங்க.. இரு நாளில் வந்துவிடுகிறேன் என கூறி ஒரு வாரமாகியும் வராத தாய்க்கு வலைகுழந்தையை பார்த்துக்கோங்க.. இரு நாளில் வந்துவிடுகிறேன் என கூறி ஒரு வாரமாகியும் வராத தாய்க்கு வலை

    அடுத்தடுத்து சம்பவம்

    அடுத்தடுத்து சம்பவம்

    பொள்ளாச்சி, உடுமலை சாலையிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் மைதானத்தில், சில தினங்கள் முன்பு புழுதிச் சுழல் ஏற்பட்டது. இதன்பிறகு திங்கள்கிழமையும் இதே மாதிரி புழுதி புயல் ஏற்பட்டது. அது பூமிக்கும், வானுக்குமாக உயர்ந்த வடிவத்தில் காணப்பட்டது. சுழலின் வேகம் மிக கடுமையாக உள்ளது.

    மக்கள் ஆச்சரியம்

    மக்கள் ஆச்சரியம்

    பொள்ளாச்சி மக்களோ, இதுவரை இப்படி ஒரு புழுதி சுழல் ஏற்பட்டதில்லை என்று ஆச்சரியத்தோடு சொல்கிறார்கள். புழுதி புயல் பொதுவாக, வறண்ட பகுதியில் ஏற்படும். சில வினாடிகள் நீடிக்க கூடியது. பொதுவாக பெரும் ஆபத்தை விளைவிக்காது. நமது நாட்டில் ராஜஸ்தானில் இதுபோன்ற புழுதி புயல்கள் சகஜமானது.

    பொள்ளாச்சியில் எப்படி

    பொள்ளாச்சியில் எப்படி

    தென்னை மர பூமியான பொள்ளாச்சியில் ஏன் இப்படி புழுதி புயல் ஏற்பட்டது? அதுவும் அடுத்தடுத்து சில நாட்களில் இப்படி ஏற்பட்டுள்ளதே ஏன்? இப்படியெல்லாம் பொதுமக்கள் ஆச்சரியத்தோடு பேசிக்கொள்கிறார்கள். சில மக்கள் பீதியோடும் பேசிக்கொள்வதை கேட்க முடிகிறது.

    மக்கள் சந்தேகம்

    மக்கள் சந்தேகம்

    பொள்ளாச்சி பகுதியில் இந்த புழுதி புயல் வீடியோ வாட்ஸ்அப்களில் வைரலாக சுற்றி வருகிறது. பொள்ளாச்சி பாலியல் கொடுமை, சம்பவங்களால் பூமாதேவி கொதித்துவிட்டார் என்று மக்கள் இதுகுறித்து பேசி வருகிறார்கள்.

    English summary
    Massive sand storm strikes Pollachi, where people believes God is become angry.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X