மாணவர்களே கவனம்! எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு! எப்போது தொடங்குகிறது
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அகில இந்திய இடங்களுக்கான கலந்தாய்வு எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த அறிவிப்புகள் இப்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே மருத்துவ இடங்கள் நீட் தேர்வின் மூலமே நிரப்பப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் மாணவ, மாணவியர் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

அதன்படி இந்தாண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில், இப்போது அகில இந்திய இடங்களுக்கான கலந்தாய்வு குறித்து சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
கலந்தாய்வு: அதன்படி அகில இந்திய இடங்களுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் ஜூலை 20ஆம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாட்டில் இருந்து மருத்துவ இடங்களில் சேர 40,193 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களுக்கான கலந்தாய்வு அடுத்த வாரம் தொடங்குகிறது. மாணவர்கள் ஆன்லைன் மூலமும் இதற்காக அமைக்கப்பட்டுள்ள மையங்கள் மூலமாகவும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கவிக்கப்பட்டுள்ளது.
இந்த அகில இந்திய ஒதுக்கீடு மூலம், அரசு நிகர்நிலை, மத்தியப் பல்கலைக்கழகங்கள், எய்ம்ஸ், ஜிப்மர் நிறுவனங்களில் சேரலாம். இந்த அகில இந்திய இடங்களுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு வரும் ஜூலை 20 முதல் விண்ணப்பிக்கலாம். என்று மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஜூலை 22 முதல் மாணவ, மாணவிகளே இடங்களைத் தேர்வு செய்யலாம். அதே நாளில் மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய ஒதுக்கீடு: ஜூலை 22 முதல் 26 வரை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு இடங்களை மாணவர்கள் தேர்வு செய்யலாம் என்ற நிலையில், தொடர்ந்து மாணவர்களுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்யும் நடைமுறை ஜூலை 27, 28 தேதிகளில் நடக்கும் நிலையில், அதைத் தொடர்ந்து ஜூலை 29ஆம் தேதி கலந்தாய்வு முடிவுகள் அறிவிக்கப்படும்..
மேலும், ஜூலை 30ஆம் தேதிக்குள் தேசிய மருத்துவ கலந்தாய்வுக் குழுவின் இணையதளத்தில் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை மாணவர்கள் கல்லூரிகளில் சேரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இரண்டாம் கலந்தாய்வுகள் நடக்க உள்ளது.
மாநில ஒதுக்கீடு: அதேபோல மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வும் அதே ஜூலை 22இல் தொடங்குகிறது. இது மாணவர் சேர்க்கை குழு மூலம் நடத்தப்படுகிறது. பொதுவாக அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு முடிந்த பிறகு மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வும் நடக்கும். ஆனால், இந்த முறை போதிய கால அவகாசம் இல்லாததால் ஒரே நாளில் இரண்டு கலந்தாய்வும் நடக்கிறது.
மாநில ஒதுக்கீட்டிற்கான பட்டியலை வரும் 16இல் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிடுகிறார். ஜூலை 22இல் கலந்தாய்வு தொடங்கும் நிலையில், தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் மாணவர்கள் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 5050 இடங்களும், இஎஸ்ஐசி மருத்துவமனையில் 150 இடங்களும், 2 பல் மருத்துவக்கல்லூரியில் 200 இடங்களைத் தேர்வு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications