கோத்தபய ராஜபக்சேவின் வெற்றி இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் .. வைகோ கவலை
Recommended Video
சென்னை: இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றது இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாளாகும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை முடிவடைந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கப்பட்டது. நள்ளிரவுக்குள் யார் அதிபர் என்பது குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் முடிவுகள் தாமதமாயின.
மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில் கோத்தபய ராஜ்பக்சேவுக்கும் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானது.

சிங்களர்கள்
அதில் தமிழர்கள் வாழும் பகுதியில் சஜித் அபாரமாக வெற்றி பெற்றார். ராஜபக்சேவுக்கு தமிழர்கள் யாரும் ஆதரிக்கவில்லை. அவருக்கு சிங்களர்களின் ஆதரவே அதிகமாக இருந்தது.

அதிபர் தேர்தல்
இந்த நிலையில் அதிபர் தேர்தலில் தான் தோல்வியுற்றதை ஒப்புக் கொண்ட சஜித், கோத்தபயவுக்கு வாழ்த்து தெரிவித்தார். இலங்கை அதிபர் தேர்தல் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில் இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் கவலையளிக்கிறது.

இந்திய அரசு
கோத்தபய ராஜபக்சேவுக்கு வாக்களிக்காத, சஜித்துக்கு வாக்களித்த தமிழர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கோத்தபய ராஜ்பக்சே வெற்றிக்கு பிறகு இந்திய அரசுக்கு பொறுப்பு அதிகரித்துள்ளது. இலங்கைத் தமிழர்களை இந்திய அரசு காக்க வேண்டும்.

தமிழ் மக்கள்
கோத்தபய வெற்றி பெற்ற நாளான இன்று இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் ஆகும். இலங்கையில் நடைபெற்ற படுகொலைக்கு ஒரு நாள் நீதி கிடைக்கும். இறுதிப் போரில் காணாணல் போன லட்சக்கணக்கான மக்களின் நிலை குறித்து தெரியவில்லை என்றார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications