தீபாவளிக்கு மறுநாள்.. சென்னையில் உள்ள இறைச்சி கடைகள் மூட உத்தரவு.. என்ன காரணம்?
சென்னை: தீபாவளிக்காக மக்கள் அதிகமான அளவில் பட்டாசுகளை வாங்கி வெடிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதிக அளவில் பட்டாசுகளை வெடிப்பதன் மூலம் சிவகாசியின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் சாத மதங்களைக் கடந்து பலரும் கொண்டாடும் பண்டிகை என்றால் அது தீபாவளி தான். இந்தாண்டு வரும் அக். 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதற்காகப் பொதுமக்கள் இப்போதே புத்தாடை, இனிப்பு, பட்டாசுகள் ஆகியவற்றை பெரும்பாலும் வாங்கிவிட்டனர். மேலும், சென்னைவாசிகள் தங்கள் சொந்த ஊர் நோக்கியும் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
தீபாவளிக்கு மறுநாள்: தீபாவளிக்கு மறுநாளே, அதாவது நவ. 1ம் தேதி வெள்ளிக்கிழமை சமணர்களின் முக்கிய தினமான மகாவீர் நிர்வான் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி சார்பில் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது மகாவீர் நிர்வான் தினத்தை முன்னிட்டு வரும் நவ. 1ம் தேதி இறைச்சிக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறைச்சி கடைகள் மூடல்: பொதுச் சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் மகாவீர் நிர்வான் தினத்தை முன்னிட்டு வரும் நவம்பர் 1 அதாவது வெள்ளிக்கிழமை மூடப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.. மேலும், சமணர்கள் வழிபடும் ஜெயின் கோயில்களில் இருந்து சுமார் 100 மீட்டர் சுற்றளவில் உள்ள எல்லா இறைச்சிக் கடைகளும் மூடப்படும் என்றும் அன்றைய தினம் இந்த கடைகளில் இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications