சிரித்துகொண்டே போனோம்.. சிரித்துகொண்டே வந்தோம்.. மக்களும் சிரித்து கொண்டே இருந்தனர்.. மரண கலாய் மீம்
ராஜேந்திர பாலாஜியின் கருத்தினை நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.
Recommended Video
சென்னை: நடிகர் மனோபாலா ஒரு படத்தில் சொல்லுவாரே.. "பொழப்பு சிரிப்பா சிரிச்சிட போகுதுன்னு" அப்படி ஆகிவிடுமோ தெரியவில்லை தமிழக அரசியல் நிலவரம்!
இன்று காலை அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் ஒற்றை தலைமைக்கு யாரை தேர்ந்தெடுக்க போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.

குறிப்பாக, ஓ பன்னீர்செல்வமா, எடப்பாடியா, இவர்களில் யார் அந்த ஒற்றை என்பதே பெரிய கேள்வியாக எழுந்தது. அதனால் காலை 10 மணிக்கு கூட்டம் என்றால் அதற்கு முன்பேயே பரபரப்பு தொத்தி கொண்டது.
இது போதாதென்று, அதிமுக கூட்டமே தொடங்காத நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடியாரே வருக என்ற போஸ்டரும், பொதுச்செயலாளர் செங்கோட்டையன் என்ற போஸ்டரும் மேலும் நம்மை கதி கலங்க வைத்துவிட்டன. அந்த அளவுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருந்தது. ஒன்றரை மணி நேரம் கூட்டம் நடந்தாலும், உள்ளே என்ன பேசுவார்களோ என்று லேசான பிரஷரும் எகிறியது.

ஆனால் ராஜேந்திர பாலாஜி வெளியே வந்து சொன்னாரு பாருங்க ஒரு வார்த்தை.. அதில் எல்லா எதிர்பார்ப்புமே பஞ்சு பஞ்சாய் பறந்து போய்விட்டது. கூட்டத்தில் என்ன நடந்தது என்று செய்தியாளர்கள் கேட்க, "சிரித்துக் கொண்டே சென்றோம், சிரித்துக் கொண்டே வெளியே வந்தோம்" என்றார்.
இதைதான் நெட்டிசன்கள் வைத்து ஓட்டி வருகிறார்கள். சிரித்து கொண்டே போனோம், வந்தோம் என்ற கருத்துக்கு, "மக்களும் சிரித்து கொண்டேதான் இருந்தனர்" என்று ட்வீட் போட்ட கலாய்க்க ஆரம்பித்துள்ளனர். ஜெயலலிதா இருந்தபோது, சீரியஸான கட்சியாக இருந்த அதிமுக, இப்போது மக்கள் சிரிக்கும்படி கொண்டு போய்விட்டார்களே என்று கலாய்கள் விழுந்து கொண்டே இருக்கின்றன.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications