எப்போதான் கரையை கடக்கும்.. இப்படி கன்ப்யூஸ் பண்ணுதே கஜா புயல்!
Recommended Video
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல், இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகளுக்கும், தனியார் வானிலை ஆய்வாளர்களுக்கும், பெரும் சவாலாக உருவாகியுள்ளது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக காணப்பட்ட நிலையில் பின்னர அது புயலாக உருவெடுத்ததாக வானிலை இலாகாவால் அ்றிவிக்கப்பட்டது.
புயலுக்கு பெயர் சூட்டும் நடைமுறையின் ஒரு பகுதியாக, தாய்லாந்து நாடு சார்பில், இந்த புயலுக்கு கஜா என்று பெயர் சூட்டியுள்ளது.
விரல் விட்டு ஆட்டுது
ஆனால் இந்த புயல் அத்தனைபேரின் கண்களும் விரலைவிட்டு ஆட்டி வருகிறது. புயல் நகரும் திசை என்பதிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. முதலில் கடலூர் மற்றும் சென்னை நடுவே கரையை கடக்கும் என்ற அளவில் கணிக்கப்பட்டது. ஆனால் நேற்றுமுன்தினம் மாலையில், இந்த நிலை மாறி, புயல் கடலூருக்கும் பாம்பனுக்கும் நடுவே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. புயலின் வேகத்திலும் வித்தியாசம் காணப்படுகிறது.
[ஆச்சரியம், ஆனால் உண்மை.. கஜா புயல் தோற்றத்தை உற்று பாருங்கள் ஒரு உண்மை தெரியும் ]
வேகத்தில் வேறுபாடு
நேற்று அதிகாலை ஐந்து கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து பிறகு நான்கு கிலோமீட்டர் வேகத்தில் குறைந்தது. ஆனால் மதியம் மும்மடங்காக வேகம் அதிகரித்து 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்தது. இப்போது மீண்டும் ஆறு கிலோமீட்டராக வேகம் குறைந்து நகர்ந்தபடி உள்ளது.
எப்போது வரும்
புயலின் வேகம் மற்றும் அதன் திசை தெரியாமல் விழி பிதுங்கி போயுள்ளனர் தனியார் வானிலை ஆய்வாளர்கள். இந்திய வானிலை ஆய்வு மையத்திற்கும் கூட இந்த புயல் கண்ணாமூச்சி தான் காட்டிக்கொண்டு உள்ளது. அங்கே வருகிறது எங்கே வருகிறது என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்களே தவிர, இன்னும் புயல் வந்தபாடில்லை.
|
மாலையில் கரையை கடக்கும்
நாளை மதியம் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாலையில்தான் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தான் இந்த ஒரு மீம் தெளிவாக சொல்கிறது. சீக்கிரம் நகர்ந்து செல்லப்பா.. நாங்கள் படும் அவஸ்தை தாங்க முடியவில்லை.. மயக்கமே வந்து விடுகிறது என்பது போல ஆய்வாளர்கள் சொல்வதை போல உள்ளது இந்த மீம்.