அடி வெளுக்கப்போகுது! தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழையாம்.. வானிலை ஆய்வு மையம் அப்டேட்
சென்னை: சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேபோல 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் அளவு குறைந்திருக்கிறது. சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பரவலான இடங்களில் வெயில் அதிகம் இல்லையென்றாலும் கூட மழை சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெய்யவில்லை. எனவே விவசாயிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். ஆனால் கடந்த இரண்டு மூன்று நாட்களாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இப்படி இருக்கையில் வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

அதாவது, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருச்சி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மட்டுமல்லாது இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் பரவலான இடங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications