கட்டுக்கடங்காத கூட்டம்.. உடனே களத்தில் இறங்கிய சென்னை மெட்ரோ.. 3.5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், புறநகர் மின்சார ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில் மிகக் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் உடனடி நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.

சென்னையில் விமானப்படை சாகசத்தை கண்டுகளித்து திரும்பும் மக்களின் வசதிக்காக 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

chennai chennai air show 2024 indian air force

அதன்படி, தற்போது சென்னை வண்ணாரப்பேட்டை மெட்ரோ - ஏ.ஜி. டி.எம்.எஸ் இடையே 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. விம்கோ நகர் - விமான நிலையம் இடையே 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்திய விமானப்படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் சென்னையில் இன்று மிகப் பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சி மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது.

விமான சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக லட்சக்கணக்கான பொதுமக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர். இந்திய விமானப்படையின் 72 போர் விமானங்கள் காண்போரை கவர்ந்திழுக்கும் வகையில் வான் சாகசங்களில் ஈடுபட்டன. ஹெலிகாப்டர்கள் நடத்திய வான் நடனம் மக்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

chennai chennai air show 2024 indian air force

மெரினாவில் நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண செல்வதற்காக, வேளச்சேரி ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கட்டுக்கடங்காமல் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் ஆபத்தை உணராமல் படியில் தொங்கியபடி பயணம் செய்தனர்.

இந்நிலையில், விமான சாகச நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில், லட்சக்கணக்கான பொதுமக்கள், ஒரே நேரத்தில் புறநகர் மின்சார ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில் குவிந்தனர். ஓமந்தூரார் அரசினர் தோட்டம் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் வாங்க உள்ளே செல்லவே முடியாத அளவுக்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.

chennai chennai air show 2024 indian air force

இதையடுத்து, கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது சென்னை வண்ணாரப்பேட்டை மெட்ரோ - ஏ.ஜி. டி.எம்.எஸ் இடையே 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.

விம்கோ நகர் - விமான நிலையம் இடையே 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், கோயம்பேடு மெட்ரோவில் இருந்து பரங்கிமலை மெட்ரோ மார்க்கமாக செல்லும் ரயில்களும் 7 நிமிடங்கள் இடைவெளியில் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+