தீபாம்மாவை காணோமே.. ஒருவேளை 4வது அணியை ரெடி பண்ணி கொண்டிருக்கிறாரா?
அதிமுகவுக்கு ஜெ.தீபா பிரச்சாரம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: திமுக-காங்கிரஸ் நச் கூட்டணி, அதிமுக-பாமக மெகா கூட்டணி, கமல் கொளுத்தி போட்ட 3-வது அணி, விஜயகாந்த்தின் பிடிவாதம் இவற்றின் நடுவில் எல்லோரும் சேர்ந்து ஜெ.தீபாவை மறந்துவிட்டார்கள்!
ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா பற்றி, ஜெயலலிதா இறந்தபிறகுதான் நிறைய விஷயங்கள் தெரியவந்தன. குறிப்பாக சர்ச்சைகளாலேயே ஃபேமஸ் ஆனவர்தான் தீபா. ஒரு கட்சியை ஆரம்பித்த உடனேயே அலப்பறை என்றால் அது தீபாவின் 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை' என்ற அமைப்புதான்.
பொறுப்பாளர்கள் நியமனத்தில் கணவன் மாதவனுக்கும் தீபாவுக்கும் ஸ்டார்ட் ஆன சண்டை... மாதவன் தனியே பொறுப்பாளர்கள் பட்டியலை வெளியிட.. பிறகு மாதவன் ஒரு தனிகட்சியை தொடங்க... 'தீபாவை முதல்வராக்குவதே தனது கட்சியின் நோக்கம்' என்று சொல்லிவிட்டு, மீண்டும் தீபாவுடன் இணைய.. இதற்கு நடுவில்தான் கார் டிரைவர் ராஜா பிரச்சனை வெடிக்க.. இப்படித்தான் தீபா ஃபேமஸ் ஆனார்.

மாதவன்
சில தினங்களுக்கு முன்பு இவரை பற்றின 2 தகவல்கள் வெளிவந்தது. ஒன்று, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் துணை பொதுச்செயலாளராக மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது. மற்றொன்று, அதிமுகவுக்கு தன்னுடைய ஆதரவு என்றது.

தொகுதி பங்கீடு
ஆனால் இதற்கு பிறகு தீபாவை காணவில்லை. என்ன ஆனார், என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. எல்லோரும் கூட்டணி, தொகுதி பங்கீட்டில் பிசியாக இருக்கும்போது, சத்தமே இல்லாமல் இருக்கிறது தீபா பேரவை. அந்த பேரவையின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டவரும் தேர்தல் சம்பந்தமாக ஒன்றும் சொல்லவில்லை.

கார் டிரைவர் ராஜா
கட்சி ஆரம்பித்து ஒரு வருஷம் ஆக போகிறது, ஆனால் இதுவரை கட்சி ரீதியான செயல்பாடுகள் என்ன என்று தெரியவில்லை. இதுவரை பேரவையில் தீபா, கணவன் மாதவன், கார் டிரைவர் ராஜா என 3 பேரை தவிர வேறு பெயர்களை இதுவரை யாரும் கேள்விப்பட்டதே இல்லை.

4-வது அணி?
அதிமுகவுக்கு ஆதரவு என்றால் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட போகிறாரா தீபா? கமல் 3-வது அணி என்பதுபோல தீபா 4-வது அணியை சைலண்ட்டாக உருவாக்கி கொண்டிருக்கிறாரா? அப்படியானால் இதில் யார் யார் இணைய வாய்ப்புள்ளது? யாருக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும்? எனக்கு 20 உனக்கு 20 என்று உடன்படிக்கை கையெழுத்தாகுமா? என்பதெல்லாம் தெரியவில்லை.

நோட்டா
ஆனால் தீபாவுடன் அணி சேர வீரலட்சுமி உள்ளிட்ட பலர் காத்திருப்பார்கள். எனவே இவர்கள் அனைவரும் சீரியஸாக ஒன்று கூடி ஒரு அணி அமைத்துப் போட்டியிட்டு நோட்டாவை வீழ்த்த தீவிரமாக முயற்சிக்கலாம்.. நல்லது நடந்தா நல்லதுதானே. இப்படியே இருந்தால் பேரவையின் நிலை என்ன? பேரவை உறுப்பினர்களின் கதி என்ன? எதாச்சும் ஒரு முடிவை எடுங்கப்பா!!
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications