யாரோ எழுதிக் கொடுப்பதை சொல்வதுதானே ஸ்டாலினின் வேலை- அமைச்சர் சி.வி. சண்முகம்
சென்னை: யாரோ எழுதிக் கொடுப்பதை சொல்வதுதானே ஸ்டாலினின் வேலை அதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.
முதல்வர் வெளிநாட்டு பயணம் குறித்து முக ஸ்டாலின் தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளையே முன்வைத்து வருகிறார். இந்த நிலையில் சென்னையில் சட்டத் துறை அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் முதல்வரின் வெளிநாட்டு பயணம் ஆக்கப்பூர்வமான பயணம். ஒரு அரசுக்கு உள்நாட்டு முதலீடுகள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு முதலீடுகளும் தேவை.

அமைதியான மாநிலம்
நாமே அவர்களை நாடிச் சென்று தமிழகத்தின் நிலையை எடுத்துச் சொல்லி முதலீடுகளை ஈர்க்க வேண்டும். இந்தியாவில் தமிழகம் போன்ற அமைதியான மாநிலத்தில் தொழில் தொடங்குங்கள் என அழைக்க வேண்டும்.

ஸ்டாலினுக்கு வேலை
பல ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை கவர செயல்பட்டு வரும் முதல்வரை பாராட்ட ஸ்டாலினுக்கு மனமில்லை. மாறாக பொறாமையால் அவர் மீது குற்றஞ்சாட்டி வருகிறார். யாராவது எழுதி கொடுத்ததை சொல்வதுதான் ஸ்டாலினுக்கு வேலை.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
அதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. விரைவில் உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் வர நடவடிக்கை எடுக்கப்படும். தீர்ப்புகளை தமிழிலும் வெளியிட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

நீலிக்கண்ணீர்
தீர்ப்புகளை தமிழில் மொழிமாற்றம் செய்வதற்கான மென்பொருள் உருவாக்கப்பட்டு வருகிறது. 7 பேர் விடுதலையில் முதலில் முயற்சி எடுத்தது மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான். இன்று நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள் குறித்து எங்களுக்கு கவலை இல்லை என்றார் சி.வி. சண்முகம்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications