ஸ்டாலின் காந்தியும் இல்லை.. நான் புத்தனும் இல்லை.. அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசம்
சென்னை: ஸ்டாலின் காந்தியும் இல்லை, நான் புத்தனும் இல்லை என அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே உள்ளாட்சி தேர்தல் குறித்து கடும் வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒருவரை ஒருவர் குறைக் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் முரசொலியில் அமைச்சர் சிவி சண்முகத்தின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்திருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்திடம் செய்தியாளர்கள் கூறுகையில், ஸ்டாலின் காந்தியும் இல்லை , நான் புத்தனும் இல்லை. அவர் முதுகில் ஆயிரம் அழுக்குகளை வைத்திருக்கிறார்.
எனவே என்னை தனிப்பட்ட முறையில் பேசுவதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை. அமைச்சராக தனது செயல்பாடுகளில் தவறிருந்தால் விமர்சிக்கலாம்.
அதைவிடுத்து எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிக்க வேண்டாம் என்றார் சிவி சண்முகம்.












Click it and Unblock the Notifications