துரைமுருகன் இலாகாவை பறிச்சு அவர்கிட்ட கொடுக்கப் போறாங்க.. புட்டுப் புட்டு வைக்கும் திருச்சி சூர்யா!
சென்னை: செந்தில் பாலாஜி அமைச்சராவது உறுதி, அவருக்காகவே உதயநிதி ஸ்டாலின் வெய்ட்டிங்கில் இருக்கிறார், துரைமுருகன் வசம் இருக்கும் முக்கியமான இலாகா கே.என்.நேருவுக்கு வழங்கப்பட இருக்கிறது என விரைவில் நடைபெற இருக்கும் அமைச்சரவை மாற்றம் குறித்த தகவல்களை நமது ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள நேர்காணலில் அடுக்குகிறார் திருச்சி சூர்யா.
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை எப்போது மாற்றப்படும் என்ற கேள்வி கடந்த சில மாதங்களாகவே பேசுபொருளாக இருந்து வருகிறது. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி, வேறு சில அமைச்சர்களின் இலாகா மாற்றம், புதிதாக கேபினட்டில் இணையும் சிலர் என அரசல் புரசலாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்துள்ளதால் விரைவில் அமைச்சரவை மாற்றம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் என்றும், அமைச்சரவை மாற்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரும் நிச்சயம் இடம்பெறும் என்றும் தெரிகிறது.
துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினை நியமிக்க திமுகவில் அத்தனை பேரும் ஆதரவு தெரிவித்தாலும், துரைமுருகன் புழுக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரங்கள் குறித்தெல்லாம் நமது ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார் திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகனும், முன்னாள் பாஜக மாநில நிர்வாகியுமான திருச்சி சூர்யா.
திருச்சி சூர்யா பேசுகையில், "உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க அனைவரும் முடிவு செய்துவிட்டார்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை. உதயநிதி ஸ்டாலின் ஆய்வுக் கூட்டங்களுக்குச் சென்றபோது தவறு செய்த அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். துறை நிர்வாக ரீதியாக, கோப்புகள் கிடப்பில் போடப்படாமல் உடனடியாக ஒப்புதல் ஆகின்றன, பணிகளில் உதயநிதி வேகம் காட்டுகிறார் என அதிகாரிகளே சொல்கிறார்கள்.
இப்போதே உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்படாத துணை முதலமைச்சராகவே செயல்பட்டு வருகிறார். முதல்வருக்கு நிகராக அவருக்கு ஆட்சியிலும், நிர்வாகத்திலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. துணை முதல்வராக அறிவிக்கப்பட்டால் சட்டசபையில் ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் அமர்வார், துரைமுருகன் 3வது இடத்திற்குப் போய்விடுவார்.
துரைமுருகனுக்கு அவர் உழைப்புக்கு அதிகமாகவே திமுக தலைமை முக்கியத்துவம் கொடுத்துள்ளது. அவரது மகனுக்கும் இரண்டாவது முறையாக எம்.பி சீட் கொடுத்து வெற்றி பெற வைத்துள்ளனர். ஆனால், இன்றைக்கு உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்குவதை பொறுக்க முடியாமல் இருக்கிறார் துரைமுருகன்.
வரவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் கனிம வளத்துறையை துரைமுருகனிடம் இருந்து பறித்துவிடுவார்கள். நீர்வளத்துறை மட்டுமே அவரிடம் இருக்கும். உள்ளாட்சித் துறையை உதயநிதி வசம் கொடுத்துவிட்டு, கனிம வளத்துறையை கே.என்.நேருவிடம் கொடுக்கப் போகிறார்கள். துணை முதல்வராக உள்ளாட்சித்துறை உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகிக்கப் போகிறார். மின்சாரத்துறை, போக்குவரத்துத்துறையும் மாற்றப்பட இருக்கிறது.
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அவர் வகித்த இலாகாக்கள் வழங்கப்படும். கட்சித் தலைமை அவரைக் கைவிடாது. திமுக தலைமையை நம்பி வந்திருக்கிறார், அவரைக் கைவிட்டால் நாளை மற்ற கட்சிக்காரர்கள் கட்சி மீது நம்பிக்கை வைக்க மாட்டார்கள். பாஜகவை அண்ணாமலையை எதிர்த்ததால் அவர் அழுத்தத்தின் காரணமாக கைது செய்யப்பட்டார். எனவே அவரை காப்பாற்றுவதை திமுக தலைமை தங்கள் கடமையாகவே நினைக்கும்." எனத் தெரிவித்திருக்கிறார்.
-
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications