ஜெகத்ரட்சகன் இதற்கெல்லாம் அசரமாட்டார்.. நேர்மையான கணக்கு இருக்கும்.. சர்ட்டிபிகேட் கொடுத்த எவ வேலு!
சென்னை: திமுக எம்.பி ஜெகத்ரட்சகனை குறி வைத்து வருமான வரித்துறை ரெய்டு மேற்கொண்டுள்ள நிலையில், ஜெகத்ரட்சகன் நேர்மையான கணக்குகளை வைத்திருப்பார் என சர்ட்டிபிகேட் கொடுத்துள்ளார் அமைச்சர் எ.வ.வேலு.
அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி.யும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஜெகத்ரட்சகன், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உட்பட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார். கடந்த 2020ஆம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்ததால், அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்ட குற்றச்சாட்டில், ரூ.89.19 கோடி மதிப்பிலான அவரது சொத்துகளை அமலாக்கத்துறை அப்போது முடக்கியது.

ரெய்டு வலையில் ஜெகத்ரட்சகன்: இந்நிலையில், ஜெகத்ரட்சகன் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித் துறைக்கு புகார்கள் சென்ற நிலையில், ஜெகத்ரட்சகனின் வீடுகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், ஹோட்டல்கள் என பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5ஆம் தேதி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரியில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமாக உள்ள இடங்களிலும் சோதனை நடைபெற்றது. அமலாக்கத் துறையும் வருமான வரித்துறையினருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தியதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். சுதந்திரமாக செயல்பட வேண்டிய விசாரணை அமைப்புகளை மத்திய பாஜக அரசு அரசியல் நோக்கத்துடன் 'இந்தியா' கூட்டணி தலைவர்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்திக் கொள்கிறது என அவர் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், திமுக அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி ஆகியோர், ஜெகத்ரட்சகன் மீதான ரெய்டு குறித்துப் பேசியுள்ளனர்.
சர்ட்டிபிகேட் கொடுத்த எவ வேலு: செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எ.வ.வேலு, "ஜெகத்ரட்சகன் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல, அவர் ஒரு தொழிலதிபர். அவருடைய வீடு மற்றும் அவர் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் வரும் நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை தேவையற்றது. அனைவருக்கும் பரிச்சயமான மக்கள் பிரதிநிதியான ஜெகத்ரட்சகன் எங்கும் ஓடி ஒளியக்கூடியவர் அல்ல.
வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களது சோதனையை மேற்கொள்வதில் தவறில்லை. ஆனால், எந்த காலத்தில் மேற்கொண்டு வருகிறார்கள் என்பதுதான் கேள்வி. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு இந்த சோதனைகளை நடத்தக் கூடாதா? தேர்தல் சமயத்தில் அச்சுறுத்தவே இதுபோன்ற சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் ஜெகத்ரட்சகன் அஞ்ச மாட்டார். அடிபணியவும் மாட்டார். இதுபோல பல ரெய்டுகளை பார்த்தவர் அவர். நேர்மையான கணக்கு வழக்குகளை வைத்திருப்பவர் என்பதால் இதையெல்லாம் கடந்து சென்றுவிடுவார்" எனத் தெரிவித்தார்.
பொன்முடி கருத்து: இதேபோல விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, "முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் பழிவாங்கும் நோக்கத்தோடு ஐடி ரெய்டு நடைபெறுகிறது. அவர் சிறந்த தமிழ் அறிஞர். அவரைப் பற்றி எல்லோருக்கும் தெரியும், இந்த நிலையில் இந்த ரெய்டு நடத்தப்படுகிறது. ஜெகத்ரட்சகன் உழைப்பால் உயர்த்தவர் என்பதை நாடு அறியும். கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டிக் கொண்டிருப்பவர். ஆகவேதான் அவரை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications