அமைச்சர் காந்தியின் பேச்சு மொழி! சட்டசபையில் சிரிப்பை அடக்க முடியாமல் அமர்ந்திருந்த எம்எல்ஏக்கள்!
சென்னை: கைத்தறித்துறை மற்றும் துணிநூல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்ற நிலையில், அமைச்சர் ராணிப்பேட்டை காந்தியின் பேச்சைக் கேட்டு எம்.எல்.ஏ.க்கள் பலரும் சிரிப்பை அடக்க முடியாமல் அமர்ந்திருந்தனர்.
தனக்கே உரிய தமிழ் உச்சரிப்பில் அமைச்சர் காந்தி பேசியதோடு மட்டுமல்ல, அவ்வப்போது ''ஆனால்'' என்று குறிப்பிட்டு தனது பேச்சில் ட்விஸ்ட் வைத்துக் கொண்டே இருந்தார்.

அதுமட்டுமல்ல பேச்சைத் தொடங்கும் முன்பாக முதல்வருக்கு மட்டும் வணக்கம் வைப்பார் என்று பார்த்தால், துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், முரசொலி செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கொறடா, எதிர்க்கட்சித் தலைவர், ராணிப்பேட்டை தொகுதி மக்கள், கட்சியினர், என பலருக்கும் வணக்கம் வணக்கம் என்று நீண்ட லிஸ்டை வாசித்தார்.
அமைச்சர் காந்தி இடைவிடாமல் பேசியதை பார்த்து அவர் அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் செந்தில்பாலாஜி, வாட்டர் கேன் மூடியை திறந்து கொடுத்து தண்ணீர் குடிக்கிறீர்களா எனக் கேட்டார்.
ஆனால் அதைக் கூட கவனிக்காமல் மும்முரமாக பேசிக்கொண்டிருந்த அமைச்சர் காந்தி, அறிவுப்புகளை வெளியிட ஆரம்பித்தார். அமைச்சர் காந்தியின் பேச்சுமொழி எப்படி இருக்கும் என்பது அவரை அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

இவர் தனது பாஷையில் ஒரு பக்கம் பேசிக்கொண்டிருக்கும் போது மற்றொரு பக்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் அமர்ந்திருந்ததை காண முடிந்தது.
இன்னும் சொல்லப்போனால் அமைச்சர் பொன்முடி விழுந்து விழுந்து சிரித்தார். இதனிடையே எப்படியோ ஒரு வழியாக அமைச்சர் காந்தி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அமர்ந்த பிறகு அவருக்கு கை கொடுத்து அனைத்து அமைச்சர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் சிரித்த முகத்துடன் காந்தியை நோக்கி திரும்பிப்பார்த்து வணக்கம் வைத்து தனது பாராட்டை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications