"ஓட்டு போட்டாச்சு".. ஸ்ட்ரைட்டா பிரியாணி கடைக்குள் நுழைந்த அமைச்சர்.. திகைத்த ராயப்பேட்டை
அமைச்சர் ஜெயக்குமார் பிரியாணி சாப்பிடும் போட்டோ வைரலாகிறது
சென்னை: ஓட்டு போட்டுவிட்டு, நிஜாம் பாய் பிரியாணி கடைக்குள் நுழைந்துவிட்டார் அமைச்சர்.. இந்த போட்டோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது..!
ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடுகிறார்... இந்த முறை ஜெயக்குமார் பிரச்சாரமே வித்தியாசமாக இருந்தது..
தொகுதி முழுவதும் சைக்கிள் ரிக்ஷாவில் ஏறி உட்கார்ந்து வாக்கு கேட்டார்.. டான்ஸ் ஆடியும், பாட்டு பாடியும் வாக்கு கேட்டார்.. இளநீர் வெட்டி தந்து பொதுமக்களிடம் வாக்கு கேட்டார். மக்களிடம் இயல்பாக பழகுவதும், ஈகோ இல்லாமல் பேசுவதும் ஜெயக்குமாருக்கு இயல்பான ஒன்று என்றாலும், இந்த பிரச்சாரம் அதற்கு உறுதுணையாக இருந்தது.
இதுக்கும் பாஜக தான் காரணமா??.. விக்ரம் ஏன் நடந்து போய் ஓட்டு போட்டார் தெரியுமா.. கிளம்பிய பீதி!!
உளறல் மன்னன்
அதேசமயம், திமுக தரப்பை உண்டு, இல்லை என்று விமர்சித்து வந்தார்.. "ராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் 100 கோடி ரூபாய் தேர்தல் செலவு செய்ய பிளான் உள்ளது.. திமுகவின் நட்சத்திர பேச்சாளர் ஆர்எஸ் பாரதி ஒரு உளறல் மன்னன்... உதயநிதி ஸ்டாலின் ஒரு பச்சிளம் குழந்தையைப் போல செயல்படுகிறார்... ஊழலில் ஊறிய கட்சி திமுக" என இப்படி வாரி வாரி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வாக்கு சேகரித்தார்.
திமுக தலைவர்
ஜெயக்குமார் மட்டுமில்லை.. திமுக தலைவரும் இதே ராயபுரம் தொகுதியில் வந்து ஜெயக்குமாரை சரமாரியாக விமர்சித்து வாக்கு கேட்டார்.. "இந்த தொகுதியில் நிக்கிற அமைச்சர் ஜெயக்குமாரை ஓட ஓட விரட்டணும்.. தோல்வி அடைய வைக்கணும்.. தோல்வின்னா உங்க வீட்டு தோல்வி, எங்க வீட்டு தோல்வி இல்லை.. படுதோல்வி அடையணும்.. டெபாசிட் காலி ஆகணும்.. அவர் சாதாரண ஆளுன்னு நினைச்சிடாதீங்க.. வெறும் கில்லாடி இல்லை.. பலே கில்லாடி.. ஜெயலலிதாவையே கவிழ்க்க பார்த்தவர்" என்று தெறிக்க விட்டார்.
ஜெயக்குமார்
இந்த அளவுக்கு ராயபுரம் தொகுதி பிரச்சார நேரத்தில் படுபிஸியாக இருந்தது.. களமே சூடாகி கிடந்தது.. ஆனால், இதற்கான அறிகுறி எதுவும் இல்லாமல், ஜெயக்குமார் இன்றைய தினம் கேஷூவலாகி விட்டார்.. மதிய நேரம் வாக்குச்சாவடிக்கு வந்து தன் வாக்கை பதிவு செய்தார் ஜெயக்குமார்..
பிரியாணி
ஆனால், வீட்டுக்கு போகாமல், நேராக ராயப்பேட்டையில் உள்ள நிஜாம் பிரியாணி கடைக்கு சென்று உட்கார்ந்து பிரியாணி ஆர்டர் செய்தார்.. அவருடன் வேறு யாரையும் காணோம்.. அவர் மட்டும் உட்கார்ந்து ஆர்டர் செய்து, பிரியாணி வரவழைத்து சாப்பிடும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.