விஜயகாந்த், ஜி.கே. வாசன் எங்க கூட்டணிக்கு தான் வருவாங்க.. அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை
Recommended Video

சென்னை:அதிமுக கூட்டணியில் தேமுதிகவை சேர்க்க தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ராயபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று உதவிகள் வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அதிமுக கூட்டணியில் தேமுதிகவை சேர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சகோதரர் விஜயகாந்த் இதில் நல்ல முடிவை அறிவிப்பார். சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடக்கிறது. எனவே, விரைவில் நல்ல முடிவு ஏற்படும்.
எங்கள் கூட்டணியில் தமாகாவையும் சேர்க்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணி விஷயத்தில் ஜெட் வேகத்தில் முன்னேறி வருகிறோம். பிரதமர் மோடி 6ம் தேதி சென்னை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
அதே மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களையும் இடம் பெற செய்ய ஏற்பாடு நடக்கிறது. எனவே அதற்குள் கூட்டணியை இறுதி செய்ய உள்ளோம். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியும் விரைவாக நடைபெற்று வருகிறது.
அதிமுகவுக்கு எதிர்க்கட்சி திமுக தான். துரோகி கட்சி அமமுக, திமுக, காங்கிரஸ் கூட்டணி தான் துரோக கூட்டணி. எங்கள் கூட்டணி தான் லோக்சபா தேர்தலில் வெற்றி பெறும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications