ஆபரேஷன் சக்ஸஸ்.. பேஷன்ட் டெட்.. தமிழிசை கருத்துக்கு ஜெயக்குமார் பொளேர் பதில்
தமிழிசையின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் புது விளக்கம் அளித்துள்ளார்.
விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை வியாசர்பாடியில் உள்ள செயின்ட் தாமஸ் முதியோர் இல்லத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் முதியோர் இல்லங்களில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு நிமோனியா தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதனை அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கூட்டாக தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

தீர்க்கவில்லை
அப்போது, "அன்று காங்கிரசுடன் கூட்டணியில் திமுக இருந்தபோது, நிறைய பிரச்சனைகளை சரி செய்திருக்கலாம். ஆனால் அதெல்லாம் தீர்க்காமல் இன்னும் அதிகப்படுத்தினார்கள்.

நிலைநாட்டுவோம்
எனவே மேகதாட்டு விஷயத்தில், திமுகவை போல் சந்தர்ப்பவாதம் இன்றி உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தளவில் உணர்வுகளை நாடாளுமன்றத்தில் பிரதிபலித்து உரிமையை நிலைநாட்டுவோம்" என்றார்.

வெற்றிகரமான தோல்வி
இதையடுத்து, 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன், "வெற்றிகரமான தோல்வி" என்று சொல்லி இருக்கிறாரே, அதை பற்றி என்னி நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

ஆபரேஷன் சக்ஸஸ்
இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் சிரித்துவிட்டு "ஆங்கிலத்தில் சொல்வார்களே 'ஆப்பரேஷன் சக்ஸஸ், பேஷண்ட் டெட்' என்று. அதுபோல, பல்வேறு வகையில் கருத்துக்களை சொல்வார்கள். எனவே இதன் உள்ளார்ந்த அர்த்தம் என்ன என்பதையும், என்ன வெளிப்படுத்த முயல்கிறார் என்பதையும், யார் சொன்னாங்களோ அவங்க கிட்டதான் நீங்கள் கேட்க வேண்டும்.

வேறு மாநில தேர்தல்
இது வேறு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல். ஒரு கட்சி ஜெயித்தால் மற்றொரு கட்சி தோற்கும். அதனால் இது சம்பந்தமாக தோற்றவர்களிடம்தான் நீங்கள் கருத்து கேட்க வேண்டும்" என்று பதிலளித்தார் அமைச்சர்.












Click it and Unblock the Notifications