ரேஷன் அரிசி விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை... அமைச்சர் காமராஜ் திட்டவட்டம்
சென்னை: தமிழகத்தில் ஒரு நபர் மற்றும் இரண்டு நபர் குடும்ப அட்டைகளுக்கான அரிசி அளவு குறைக்கப்பட்டதாக வெளியாகிய தகவலை அமைச்சர் காமராஜ் அடியோடு மறுத்துள்ளார்.
தமிழகத்தில் 35 ஆயிரத்து 253 நியாயவிலைக்கடைகள் குடிமைப் பொருள் வழங்கல் கழகம் மூலம் நடத்தப்படுகின்றன. இவற்றில் 9 ஆயிரம் கடைகள் பகுதிநேரக் கடைகளாக இயக்கப்படுகின்றன. குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பொருட்கள் நிர்ணயிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுவரை ஒரு நபர் குடும்ப அட்டைக்கு 12 கிலோ வழங்கப்பட்டு வந்த அரிசி 7 கிலோவாகவும், இரண்டு நபர் குடும்ப அட்டைதார்களுக்கு 16 கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 12 கிலோவாக குறைக்கப்பட்டதாக இன்று காலை தகவல் வெளியாகியது. ஆனால் இது முற்றிலும் பொய்யான தகவல் என்றும், ரேஷன் அரிசி விநியோகத்தை பொறுத்தவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பான விரிவான விளக்கத்தை பெற குடிமைப் பொருள் வழங்கல் கழக அதிகாரிகளை நாம் தொடர்பு கொண்டு பேசிய போது, அரிசி அளவு குறைக்கப்படவில்லை என்றும் யாரோ சிலர் விசாரிக்காமல் தவறான செய்தியை பரப்பியுள்ளார்கள் எனவும் வேதனை தெரிவித்தனர். ஊரடங்கு காரணமாக அரிசியின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர குறைக்கப்படவில்லை என அவர்கள் உறுதியளித்தனர்.
இதனிடையே தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடி குடும்ப அட்டைதாரர்கள் இருக்கும் நிலையில், ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மட்டும் முதற்கட்டமாக அமல்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications