என்ன செய்வீங்களோ தெரியாது! இதெல்லாம் நடக்கனும்! ஹெட் மாஸ்டர்களுக்கு பாடம் எடுத்த அமைச்சர் கயல்விழி!
சென்னை: பழங்குடியினர் நலப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களை அழைத்து கூட்டம் நடத்தி பாடம் எடுத்திருக்கிறார் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்.
நாளை மறுநாள் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் சூழலில் இன்று இந்தக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்.
பழங்குடியினர் நலப் பள்ளிகளுக்காக அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

பழங்குடியினர்
அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் இன்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் கயல்விழி, பழங்குடியின மக்களுக்கு கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு தலைமை ஆசிரியர்களை கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் கயல்விழி
மேலும், வருபவர்கள் வரட்டும் போகிறவர்கள் போகட்டும் என வேடிக்கை பார்க்காமல் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர் இடைநிற்றலை தவிர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கட் அண்ட் ரைட்டாக அமைச்சர் கயல்விழி ஆர்டர் போட்டார்.

நாளை மறுநாள்
நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் பள்ளி மற்றும் விடுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தி பள்ளிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியதுடன் தாம் திடீர் விசிட் அடிப்பேன் எனவும் எச்சரித்துள்ளார். அதேபோல் பழங்குடியினர் உண்டி உறைவிடப்பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கு தகுந்த ஆலோசனை வழங்கி அவர்கள் உயர்கல்வி படிப்பில் சேருவதை உறுதி செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு புதிய பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்.

விளையாட்டு ஆர்வம்
பழங்குடியினர் பள்ளி தானே என்று எண்ணாமல், அந்தப் பள்ளிகளில் பயிலும் மாணாவர்களிடையே விளையாட்டு மீதான ஆர்வத்தினை ஏற்படுத்தி விளையாட்டில் மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொண்டுவரவும் தலைமை ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவுரை வழங்கி அவர்களை அனுப்பி வைத்துள்ளார்.
-
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி -
தேவர் Vs தேவர் மகன்.. திண்டுக்கல் சீனிவாசனை எதிர்க்கும் ஐபி செந்தில்குமார்! வரலாறு படைக்குமா திமுக? -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி.. கேம் சேஞ்சர் ஸ்டாலின்.. திமுக பக்கா ஸ்கெட்ச் -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம்











Click it and Unblock the Notifications