அங்க பாரு தூங்குறாரு அவரை எழுப்புயா! எந்த ஊர்யா நீ? அதிகாரியை காய்ச்சி எடுத்த அமைச்சர் கே.என்.நேரு!
சென்னை: அரசு நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருக்கும் போது அதிகாரி ஒருவர் தூங்கி வழிந்ததை கண்ட அமைச்சர் கே.என்.நேரு, தனது பேச்சை நிறுத்திவிட்டு அந்த நபரை ஓபன் மைக்கிலேயே காய்ச்சி எடுத்தார்.
தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம் 2022 மற்றும் விதிகள் 2023 தொடர்பான பயிலரங்கம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. அதில் அனைத்து மாநகராட்சி ஆணையாளர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் இயக்குநர்கள் மற்றும் நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டத்தை அமல்படுத்துவது பற்றி தொண்டை தண்ணீர் வற்ற பேசிக்கொண்டிருந்தார் அமைச்சர் நேரு. அப்போது அதிகாரி ஒருவர் சற்று கண் அயர்ந்து தூங்கியதை பார்த்த நேரு கடுமையாக கோபம் கொண்டார்.
அங்க பாரு தூங்குறாரு அவரை எழுப்புயா என டென்ஷன் ஆன நேரு, எந்த ஊர்யா நீ? நல்லாயிருக்காது என லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார். நூறு பேரு இருக்கிற இடத்தில் ஏன் இப்படி நடந்துக்கிறீங்க என நொந்துகொண்டு மீண்டும் தனது பேச்சை தொடர்ந்தார்.
இந்த நிகழ்வுக்கு பிறகு அசந்து போய் அமர்ந்திருந்த அதிகாரிகள் கூட நிமிர்ந்து அமர்ந்து அமைச்சர் நேருவின் பேச்சை கேட்க ஆரம்பித்தனர். கீழே இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள், தனது பேச்சை கவனிக்கிறார்களா என்பதில் அமைச்சர் நேரு எப்போதுமே கவனமாக இருப்பார். இது அவரை பற்றி அறிந்த திருச்சி மாவட்ட அரசு அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும்.
பார்க்காதது போல் தான் இருக்கும், திடீரென கண்டுபிடித்து கடிந்துகொள்வார். சில மாதங்களுக்கு முன்பு கூட நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், பேசிக்கொண்டிருக்கும் போது செல்போனை பார்த்துக் கொண்டிருந்த உதவி செயற்பொறியாளரை உண்டு இல்லை என செய்துவிட்டார்.
இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், முதலில் கோபத்தில் அவரை எழுப்புயா, எந்த ஊர்யா நீ என ஒருமையில் பேசிய நேரு, பிறகு என்ன நினைத்தாரோ சுதாரித்துக்கொண்டு ஏங்க, வாங்க போங்க என டோனை மாற்றிக்கொண்டார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications