அங்க பாரு தூங்குறாரு அவரை எழுப்புயா! எந்த ஊர்யா நீ? அதிகாரியை காய்ச்சி எடுத்த அமைச்சர் கே.என்.நேரு!
சென்னை: அரசு நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருக்கும் போது அதிகாரி ஒருவர் தூங்கி வழிந்ததை கண்ட அமைச்சர் கே.என்.நேரு, தனது பேச்சை நிறுத்திவிட்டு அந்த நபரை ஓபன் மைக்கிலேயே காய்ச்சி எடுத்தார்.
தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம் 2022 மற்றும் விதிகள் 2023 தொடர்பான பயிலரங்கம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. அதில் அனைத்து மாநகராட்சி ஆணையாளர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் இயக்குநர்கள் மற்றும் நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டத்தை அமல்படுத்துவது பற்றி தொண்டை தண்ணீர் வற்ற பேசிக்கொண்டிருந்தார் அமைச்சர் நேரு. அப்போது அதிகாரி ஒருவர் சற்று கண் அயர்ந்து தூங்கியதை பார்த்த நேரு கடுமையாக கோபம் கொண்டார்.
அங்க பாரு தூங்குறாரு அவரை எழுப்புயா என டென்ஷன் ஆன நேரு, எந்த ஊர்யா நீ? நல்லாயிருக்காது என லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார். நூறு பேரு இருக்கிற இடத்தில் ஏன் இப்படி நடந்துக்கிறீங்க என நொந்துகொண்டு மீண்டும் தனது பேச்சை தொடர்ந்தார்.
இந்த நிகழ்வுக்கு பிறகு அசந்து போய் அமர்ந்திருந்த அதிகாரிகள் கூட நிமிர்ந்து அமர்ந்து அமைச்சர் நேருவின் பேச்சை கேட்க ஆரம்பித்தனர். கீழே இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள், தனது பேச்சை கவனிக்கிறார்களா என்பதில் அமைச்சர் நேரு எப்போதுமே கவனமாக இருப்பார். இது அவரை பற்றி அறிந்த திருச்சி மாவட்ட அரசு அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும்.
பார்க்காதது போல் தான் இருக்கும், திடீரென கண்டுபிடித்து கடிந்துகொள்வார். சில மாதங்களுக்கு முன்பு கூட நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், பேசிக்கொண்டிருக்கும் போது செல்போனை பார்த்துக் கொண்டிருந்த உதவி செயற்பொறியாளரை உண்டு இல்லை என செய்துவிட்டார்.
இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், முதலில் கோபத்தில் அவரை எழுப்புயா, எந்த ஊர்யா நீ என ஒருமையில் பேசிய நேரு, பிறகு என்ன நினைத்தாரோ சுதாரித்துக்கொண்டு ஏங்க, வாங்க போங்க என டோனை மாற்றிக்கொண்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications