கொரோனா தடுப்பூசி... 67% பேருக்கு முதல் டோஸ்... 25% பேருக்கு 2-வது டோஸ்... அமைச்சர் மா.சு. தகவல்..!
சென்னை: தமிழகத்தில் 67% பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் 25% பேருக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தை பொறுத்தவரை இன்றைய நிலவரப்படி 53 லட்சத்து 64 ஆயிரத்து 679 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாகவும் வேலை நாட்களிலும் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க சுகாதாரத்துறை சார்பில் துறை ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

முதலமைச்சரின் அறிவுறுத்தல் படி நடத்தப்பட்டு வரும் மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் பல லட்சம் பேர் பயன் அடைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள 12,500 ஊராட்சித் தலைவர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுத இருப்பதாக கூறிய அமைச்சர் மா.சு., அனைத்து ஊராட்சிகளிலும் 100% தடுப்பூசி இலக்கை அடைவதற்கு அறிவுறுத்த உள்ளதாக கூறினார்.
முதல் டோஸ் செலுத்திக்கொண்டு 84 நாட்கள் கழித்து கோவிஷீல்டு தடுப்பூசியையும், 28 நாட்கள் கழித்து கோவேக்சின் தடுப்பூசியையும் மக்களின் இல்லங்களுக்கு அருகிலேயே செலுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார்.
இந்தாண்டு இறுதிக்குள் தமிழகத்தில் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள முதல்வர் ஸ்டாலின், அதற்கேற்றவாறு நடவடிக்கைகளை வேகப்படுத்தி வருகிறார். சென்னையில் கொரோனா தடுப்பூசி முகாம்களை நேரில் ஆய்வு செய்திருக்கிறார்.
நாட்டிலேயே ஒரு முதலமைச்சர் கொரோனா தடுப்பூசி முகாமை நேரில் ஆய்வு செய்தது தமிழகத்தில் தான் முதல் முறையாக நடந்தது. திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற போது தமிழகத்தில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து புயல் வேகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளை முடுக்கிவிட்டு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது திரும்பிப் பார்க்கத் தக்கது.
Recommended Video
தற்போது தீபாவளி, கிறிஸ்துமஸ் என பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால், கொரோனா பரவல் இன்னும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதனால் அதற்குரிய தடுப்பு நடவடிக்கைகள் தமிழக அரசு தரப்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications