Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சசிகலா ஜெயிலிருந்து வந்த போதும் கூட்டம் வந்தது.. விஜயெல்லாம் மேட்டரே இல்ல! அமைச்சர் மூர்த்தி சுளீர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழகத் தலைவர் விஜயின் பிரச்சாரத்துக்குக் கூட்டம் வந்ததாகச் சொல்கின்றனர். 2011ல் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்காகப் பிரச்சாரம் செய்ய வந்த நடிகர் வடிவேலுவைப் பார்க்கக் காடு, கரை என மக்கள் கூட்டம் வந்தது எனவும், சசிகலா கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்தபோது சாலை எங்கும் கூட்டம் இருந்தது என அமைச்சர் மூர்த்தி பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரையில் இன்று தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்காதது, நீட் தேர்வு ரத்து ஆகிய கோரிக்கைகளுக்காக ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்களைக் கொண்டு போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்.

விஜய் பிரச்சாரத்திற்குக் கூட்டம் வருவதைப் பற்றி நாங்கள் பேசவில்லை. 2011ல் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்காகப் பிரச்சாரம் செய்ய வந்த நடிகர் வடிவேலுவைப் பார்க்கக் காடு, கரை என மக்கள் கூட்டம் வந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுகவின் தேர்தல் பணிகளைத் தொடங்க உத்தரவிட்டுள்ளார்.

Moorthy Vijay Sasikala

விஜய் கூட்டம்

திமுக மாவட்டந்தோறும் சட்டமன்றத் தேர்தல் பணிகளைத் தொடங்கி உள்ளது. விஜய் பிரச்சாரப் பயணம் குறித்து தமிழகத்தில் மிகப்பெரிய நடிகராக உள்ள ரஜினிகாந்தே பேசியுள்ளார். அதற்குப் பின்னர் நாங்கள் என்ன பேசுவது? விஜயினால் திமுகவின் வாக்கு வங்கி பாதிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள். சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகி சென்னை வரும்போது விடிய விடிய மக்கள் கூட்டம் வந்தது.

அமைச்சர் மூர்த்தி

ஆகவே கூட்டங்களை வைத்து அரசியல் பேசுவது சரியாகாது. மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் மக்களுக்கான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதிமுக திட்டங்கள் கொண்டு வந்ததா? திமுக திட்டங்கள் கொண்டு வந்ததா? என மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி மக்களிடம் கேட்டுப் பாருங்கள். செல்லூர் ராஜு சட்டமன்ற உறுப்பினராக உள்ள மதுரை மேற்கு தொகுதியில் சாலை, குடிநீர் வசதி மட்டுமல்லாமல் 744 சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முக ஸ்டாலின்

மதுரை மேற்கு தொகுதியில் திமுக அரசு செய்த திட்டங்களை மக்களிடமே கேட்டுப் பாருங்கள். மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சர் யாரை வேட்பாளராக அறிவிக்கிறாரோ அவரை 100 சதவீதம் வெற்றி பெறச் செய்ய பாடுபடுவோம். தொகுதிகளில் மக்களுக்கான பணிகளை நாங்கள் செய்து வருகிறோம், அதற்கான பலன்கள் எங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். சட்டமன்றத் தொகுதிகளில் பாகுபாடு பார்த்துப் பணிகள் செய்வதில்லை. அனைத்து மக்களுக்கும் உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டங்களின் கீழ் மக்களுக்கான பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

026 தேர்தல்

மதுரை மாவட்டத்திலுள்ள அரசு அதிகாரி ஒருவர் சார்ந்து பணி செய்கிறார் என்ற சு.வெங்கடேசன் எம்பியின் கருத்துக்கு அவர் தான் பதில் அளிக்க வேண்டும். மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் அரசின் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதா? திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதா? என்பதைப் பத்திரிக்கையாளர்களை அழைத்துச் சென்று காண்பிக்க நான் தயாராக உள்ளேன். மதுரை மாவட்டத்தில் எந்த ஒரு அதிகாரியும் பாரபட்சமாகச் செயல்படவில்லை, மக்களுக்கான திட்டங்களைச் செய்து வருகின்றனர். மதுரையின் மாஸ்டர் பிளான் திட்டம் 20 நாட்களுக்குள் வெளியிடப்படும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+