இ.பி.எஸ்.க்கு வயிற்றெரிச்சல்! அரசியலில் காற்று போன பலூன் ஆகி விடாதீர்! அமைச்சர் எம்.ஆர்.கே. சாடல்!
சென்னை: தமிழக வேளாண் நிதி நிலை அறிக்கையை பார்த்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வயிற்றெரிச்சல் படுவதாக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சாடியுள்ளார்.
மேலும், அரசியலில் காற்று போன பலூன் ஆகி விடாதீர் என எடப்பாடி பழனிசாமியை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

இ.பி.எஸ்.க்கு வயிற்றெரிச்சல்
நாடே போற்றும் தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையையும், உழவர் பெருமக்கள் அனைவரும் பாராட்டும் வேளாண் நிதிநிலை அறிக்கையையும் பார்த்து, உழவர்களை வஞ்சித்து ஆட்சி செய்துவிட்டுச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல் வந்துள்ளது. அதனால்தானோ என்னவோ "தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிப்பு" என்று ஒரு பச்சைப் பொய்யை அறிக்கையாக - பேட்டியாக நேற்றைய நாள் கொடுத்திருக்கிறார். அதற்கு முதலில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உழவர்கள் மகிழ்ச்சி
இன்றைக்கு தி.மு.க. ஆட்சியில் உழவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது ஒரு பாதிப்பு என்றால் முதலமைச்சர் அவர்கள் ஓடோடிச் சென்று உதவுகிறார். கேட்பதற்கு முன்பே நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க ஆணையிடுகிறார். மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பதற்கு முன்பே தூர் வாரி - காவிரி நீர் கடைமடைக்கும் செல்வதை உறுதி செய்கிறார். இலவச மின்சாரத்திற்கு இடையூறு செய்ய வரும் ஒன்றிய அரசின் மின்சார சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்புகிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர்
காவிரி டெல்டாவைப் பாதிக்கும் மேகதாது அணைப் பிரச்சினை குறித்து- காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதம் நடத்துவதற்கே வாய்ப்பு அளிக்காமல் எதிர்ப்பு தெரிவித்து- கர்நாடக அரசைப் பின்வாங்க வைக்கிறார். முல்லைப் பெரியாறு பிரச்சினையாக இருந்தாலும் - தமிழ்நாட்டின் உரிமை தொடர்பான நதிநீர் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் முனைப்புடன் செயல்பட்டு உழவர் நலனை - தமிழக உரிமையை நிலைநாட்டி வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.

துணிச்சலுடன்
நியூட்ரினோ திட்டத்தை ஏற்க மறுக்கிறார். ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்குக் கையெழுத்துப் போட முடியாது என்று துணிச்சலுடன் கூறுகிறார். சென்ற நிதிநிலை அறிக்கையிலும்- இந்த நிதிநிலை அறிக்கையிலும்- இதுவரை வெளியிடப்பட்டுள்ள உழவர்களுக்கான வேளாண் தனி நிதிநிலை அறிக்கைகளிலும்- வேளாண் துறைக்குப் பல்வேறு திட்டங்களை அறிவித்து- வேளாண் உட்கட்டமைப்பு, உற்பத்தி, விளைபொருட்களுக்கு ஏற்ற விலை என அனைத்திலும் முன்னுதாரணமாக விளங்கும் திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார்.

கேலிக்கூத்து
எங்கள் முதலமைச்சரின் வழிகாட்டுதலில் வெளியாகியுள்ள வேளாண் நிதிநிலை அறிக்கை - உழவர்களின் எதிர்காலம்! வேளாண் தொழிலின் பொற்காலம். அதைத்தான் எதிர்க்கட்சித் தலைவர் திரு. பழனிசாமியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆகவேதான், அன்றாட அரசியல் நிகழ்வுகள் குறித்து ஏதும் அறியாமல் - உட்கட்சியில் என்றைக்கு நமது பதவி போகும்- எத்தனைப் பேர் நம் பதவிக்குக் குறி வைக்கிறார்கள் என்ற தாங்க முடியாத கவலையில் அரைவேக்காட்டுத்தனமாக, ஒரு முதலமைச்சராக இருந்தவர்- இப்போது எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் அறிக்கை விடுவதும்- பேட்டியளிப்பதும் கேலிக்கூத்தாக இருக்கிறது.

போலி பச்சைத் துண்டு
ஆகவே அனைவரும் பாராட்டும் தமிழ்நாடு அரசின் தொலைநோக்குப் பார்வையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையைப் பாராட்ட மனமில்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கலாம்; ஆனால் இன்று திராவிட முன்னேற்றக் கழக அரசு அளித்துள்ள- உழவர் பெருங்குடி மக்களே பாராட்டும் வேளாண் நிதி நிலை அறிக்கையைக் கொச்சைப்படுத்தி- ஏற்கனவே ஆளுங்கட்சியாக இருந்த போது போட்ட "போலி விவசாயி", "போலி பச்சைத் துண்டு" வேடத்தை "ரிப்பீட்" செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

காற்று போன பலூன்
எங்கள் தளபதியின் அரசு - 7000 கோடி விவசாயக் கடனை ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்த- இந்தியாவிற்கே முன்னோடியாக முதன்முதலில் இலவச மின்சாரம் கொடுத்த முத்தமிழறிஞர் கலைஞர் அரசின் வழி வந்துள்ள அரசு. இது உழவர்களின் அரசு- ஆகவே திரு. பழனிசாமி அவர்கள் இதுபோன்ற பகல் வேடங்கள் போட்டு- அரசியலில் மேலும் "காற்று போன பலூன்" ஆகி விட வேண்டாம் என்ற அறிவுறுத்த விரும்புகிறேன்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications