தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ஆனார் அமைச்சர் பொன்முடி மகன்.. எதிர்த்து நின்றவர் திடீர் வாபஸ்!
சென்னை : தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் டாக்டர். அசோக் சிகாமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அசோக் சிகாமணியை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்த பிரபு தலைமையிலான குழுவினர் இன்று வாபஸ் பெற்றதையடுத்து அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அசோக் சிகாமணி 2019ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணை தலைவராக செயல்பட்டு வந்துள்ளார். விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவராகவும் இருந்துள்ளார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளராக பழநி, பொருளாளராக சீனிவாச ராவ், துணை செயலாளராக பாபா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக கடந்த 2019ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட ரூபா 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருந்து வந்தது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணைத் தலைவராக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி இருந்து வந்தார்.

அமைச்சர் மகன்
அமைச்சர் பொன்முடியின் மகனான அசோக் சிகாமணி பல ஆண்டுகளாகவே கிரிக்கெட் சங்க தொடர்பில் இருக்கிறார். விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவராகவும் இருந்துள்ளார். 2019லேயே தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் ஆவதற்கு முயற்சி மேற்கொண்டார் அசோக் சிகாமணி. அப்போது இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனின் மருமகள் ரூபா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக அசோக் சிகாமணியிடம் பேச்சுவாரத்தை நடத்தி அவரை துணைத் தலைவர் ஆக்கினர்.

தலைவர் தேர்தல்
இந்நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்தல் இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் அணியின் சார்பில் வேட்பாளராக டாக்டர் அசோக் சிகாமணி களம் இறங்கினார்.அசோக் சிகாமணிக்கு, பிசிசிஐ தலைவர் ஜெய்ஷாவின் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டது. அசோக் சிகாமணிக்கு எதிராக எஸ்.பிரபு களம் இறங்கினார்.

போட்டியின்றி தேர்வு
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் பலம் மிக்க இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் அணியை சேர்ந்த அசோக் சிகாமணியை எதிர்த்து போட்டியிடவிருந்த பிரபு இன்று தனது மனுவை வாபஸ் பெற்று தேர்தலில் இருந்து ஒதுங்கினார். இதையடுத்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் அசோக் சிகாமணி.

முக்கிய பதவி
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளராக பழநி, பொருளாளராக சீனிவாச ராவ், துணை செயலாளராக பாபா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உயர்கல்வித்துறை அமைச்சரும் திமுக துணை பொதுச் செயலாளருமான பொன்முடியின் மூத்த மகன் கௌதம சிகாமணி கள்ளக்குறிச்சி எம்.பியாக இருந்து வரும் நிலையில், இளைய மகன் அசோக் சிகாமணி தற்போது கிரிக்கெட் சங்கத்தில் முக்கிய பதவிக்கு வந்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications