தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ஆனார் அமைச்சர் பொன்முடி மகன்.. எதிர்த்து நின்றவர் திடீர் வாபஸ்!
சென்னை : தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் டாக்டர். அசோக் சிகாமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அசோக் சிகாமணியை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்த பிரபு தலைமையிலான குழுவினர் இன்று வாபஸ் பெற்றதையடுத்து அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அசோக் சிகாமணி 2019ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணை தலைவராக செயல்பட்டு வந்துள்ளார். விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவராகவும் இருந்துள்ளார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளராக பழநி, பொருளாளராக சீனிவாச ராவ், துணை செயலாளராக பாபா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக கடந்த 2019ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட ரூபா 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருந்து வந்தது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணைத் தலைவராக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி இருந்து வந்தார்.

அமைச்சர் மகன்
அமைச்சர் பொன்முடியின் மகனான அசோக் சிகாமணி பல ஆண்டுகளாகவே கிரிக்கெட் சங்க தொடர்பில் இருக்கிறார். விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவராகவும் இருந்துள்ளார். 2019லேயே தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் ஆவதற்கு முயற்சி மேற்கொண்டார் அசோக் சிகாமணி. அப்போது இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனின் மருமகள் ரூபா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக அசோக் சிகாமணியிடம் பேச்சுவாரத்தை நடத்தி அவரை துணைத் தலைவர் ஆக்கினர்.

தலைவர் தேர்தல்
இந்நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்தல் இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் அணியின் சார்பில் வேட்பாளராக டாக்டர் அசோக் சிகாமணி களம் இறங்கினார்.அசோக் சிகாமணிக்கு, பிசிசிஐ தலைவர் ஜெய்ஷாவின் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டது. அசோக் சிகாமணிக்கு எதிராக எஸ்.பிரபு களம் இறங்கினார்.

போட்டியின்றி தேர்வு
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் பலம் மிக்க இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் அணியை சேர்ந்த அசோக் சிகாமணியை எதிர்த்து போட்டியிடவிருந்த பிரபு இன்று தனது மனுவை வாபஸ் பெற்று தேர்தலில் இருந்து ஒதுங்கினார். இதையடுத்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் அசோக் சிகாமணி.

முக்கிய பதவி
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளராக பழநி, பொருளாளராக சீனிவாச ராவ், துணை செயலாளராக பாபா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உயர்கல்வித்துறை அமைச்சரும் திமுக துணை பொதுச் செயலாளருமான பொன்முடியின் மூத்த மகன் கௌதம சிகாமணி கள்ளக்குறிச்சி எம்.பியாக இருந்து வரும் நிலையில், இளைய மகன் அசோக் சிகாமணி தற்போது கிரிக்கெட் சங்கத்தில் முக்கிய பதவிக்கு வந்துள்ளார்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications