ஆளுநர் மாளிகைக்கு ஆர்.என்.ரவி செல்வதற்கு முன்பே மைக் ஆஃப்னு விளக்கம் வந்தது எப்படி? ரகுபதி கேள்வி
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் ஆளுநர் உரையாற்றும் போது மைக்கை யாரும் ஆஃப் செய்யவில்லை என்றும் ஆளுநர் வெளியேறிய அடுத்த நிமிடமே ராஜ்பவனில் இருந்து விளக்கம் எப்படி வந்தது என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. பொதுவாக ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இன்றும் ஆளுநர் உரையாற்ற வந்திருந்தார்.

அப்போது அவர் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என கேட்டார். அதற்கு சட்டசபை சபாநாயகரோ , தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதுதான் தமிழக சட்டசபையின் மரபு என மறுத்தார்.
இதனால் ஆளுநர் ரவி சட்டசபையில் இருந்து வெளியேறிவிட்டார். மேலும் ஆளுநர் வெளியேறியது ஏன் என்பது குறித்து 13 காரணங்களை குறிப்பிட்டு ஆளுநர் மாளிகை ஒரு விளக்கமளித்துள்ளது.
அதில் முதல் காரணமாக ஆளுநர் உரையின் போது மைக் ஆஃப் செய்யப்பட்டிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆளுநர் உரையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியிருப்பதாவது: ஆளுநர் ரவியின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை. அப்படி செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
தமிழ்த்தாய் வாழ்த்தை பாடுவதுதான் சட்டசபையின் மரபு. ஆனால் ஆளுநர் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்கிறார். இதற்கு மறுப்பு சபாநாயகர் அப்பாவு மறுத்துவிட்டார். அவர்தான் அவையை நடத்துபவர், எனவே அப்பாவு மரபை சுட்டிக் காட்டி மறுத்துவிட்டார்.
சட்டசபையில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறிய 10 நிமிடங்களுக்குள் எப்படி ஆளுநர் மாளிகையில் இருந்து விளக்கம் வெளியாகும்? எனவே முன்கூட்டியே அந்த விளக்கத்தை தயாரித்து வைத்துவிட்டனர் என்பது நன்றாக தெரிகிறது. இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.
ரகுபதி மேலும் பேசுகையில்,
"ஆளுநர் அறிக்கையை வாசிக்காமல், தானாக ஏதாவது வார்த்தைகளைச் சொல்லி பிரச்சனையை கிளப்ப முடியுமா என்று பார்த்தார். சட்டப்பேரவைத் தலைவர் எவ்வளவு தாழ்ந்து கேட்க முடியுமோ, அந்த அளவுக்கு ஆளுநர் அறிக்கையை வாசிக்கச் சொல்லி கேட்டார். ஆனால் ஆளுநர் வெளியேறிவிட்டார்.
அவர் மைக் ஆஃப் செய்யப்பட்டதாகக் கூறுகிறார். அது சுத்தமான பொய், ஆளுநர் தமிழக அரசிற்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்கிறார். 12 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்திருப்பதாக நாங்கள் சொல்கிறோம். தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்திருப்பதை மத்திய அரசே ஒப்புக் கொண்டுள்ளது.
தொழில் வளர்ச்சி இல்லை என்றால் 11.9% பொருளாதார வளர்ச்சியை அடைவது சாத்தியமில்லை. ஆனால் ஆளுநர் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறுகிறார். ஆளுநர் வெளியேறிய சில நிமிடங்களிலேயே மூன்று பக்க அறிக்கை வந்தது எப்படி. எல்லாம் திட்டமிடப்பட்ட வேலைகள். 2026 தேர்தலில் ஆட்சியைப் பற்றி குறை சொல்ல வேண்டும் என்பது அவருடைய கனவு.
ஆளுநரின் செயல்பாடுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை.போதை பொருள் தமிழ்நாட்டில் உற்பத்தி கிடையாது. அது எங்கிருந்து வருகிறது என்பது நாம் அனைவருக்கும் தெரியும். தமிழ்நாடு அரசு போதைப்பொருளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
கல்வித் தரம் சரியில்லை என்ற ஆளுநர் குற்றம்சாட்டுகிறார். இந்தியாவில் இருக்கக்கூடிய 100 பல்கலைக்கழகங்களில் 18 தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. உயர்கல்வி படிக்கிற பெண்களுடைய எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலம் தமிழ்நாடு.
பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மறுக்கிறேன். உள்ளாட்சி தேர்தலை ஏன் நடத்த பயப்பட வேண்டும்? செப்டம்பர், அக்டோபரில் தேர்தல் நடைபெறும்.
கோயிலுக்கு அறங்காவலர் நியமிக்கப்படவில்லை என்கிறார் ஆளுநர். ஆனால் 3163 ஆலயங்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வருகின்றன. பல கோயில்களுக்கு நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கின்றன. அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டு செயலாற்றி வருகின்றனர்.
தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக ஆளுநர் கூறிய கருத்துக்கு, "முதலில் தமிழ் தாய் வாழ்த்து, இறுதியில் தேசிய கீதம் என்பதுதான் மரபு. நாங்கள் மரபை மீறவில்லை. மரபை பின்பற்றியே அனைத்தும் நடந்ததாக ரகுபதி குறிப்பிட்டார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications