Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நம்ம கெட்ட நேரம்.. இப்படி ஒரு ஆளுநர் வந்து வாய்ச்சிருக்காரு.. நொந்துகொண்ட அமைச்சர் ரகுபதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: “நமக்கு கெட்ட நேரம்.. இதுபோன்ற ஆளுநர் நமக்கு வந்து வாய்த்துள்ளார்” என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இன்று (மே 24) மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழில் திருவள்ளுவர் காவி உடை அணிந்து இருப்பது போன்று அச்சிடப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Minister Regupathy condemns governor ravi on thiruvalluvar saffron controversy


முன்னதாக கடந்த ஜனவரி 16 திருவள்ளுவர் தினத்தன்று காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்திற்கு ஆளுநர் ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், இந்த புகைப்படம் ஆளுநர் மாளிகை சமூக வலைதள பக்கத்திலும் பகிரப்பட்டு இருந்தது.

ஆளுநரின் இந்த பதிவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, அதிமுக எம்.பி தம்பிதுரை, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆளுநர், திருவள்ளுவருக்கு காவி பூச முயல்வதாக கண்டித்திருந்தனர்.

இந்நிலையில், மீண்டும் காவி உடை, கழுத்தில் ருத்திராட்சம் அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை ஆளுநர் மாளிகை பயன்படுத்தி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளுவர், வைகாசி அனுஷம் தினத்தில் சென்னை மயிலாப்பூரில் பிறந்ததாக கருதப்படுகிறது. அதனால் இன்றைய தினம் ஒரு தரப்பினரால் திருவள்ளுவர் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த அடிப்படையில் தான் இன்று ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்படுகிறது. அதேசமயம், தமிழ்நாடு அரசு சார்பில் ஜனவரி 16ஆம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தான் ஆளுநர் மாளிகை திருவள்ளுவர் தினம் கொண்டாடி வருகிறது. திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்திற்கு இன்று மலர் தூவி மரியாதை செலுத்தி உள்ளார் ஆளுநர் ரவி.

ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடிப்பதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு. ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக வழக்கும் தொடர்ந்து உள்ளது.

இவ்வாறாக ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், ஆளுநர் மாளிகையின் அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாத்தை கிளப்புவதாக அமைந்துள்ளது.

நெற்றியில் விபூதி, காவி! மீண்டும் நிறம் மாறிய திருவள்ளுவர்! ஆரம்பித்த ஆளுநர் ரவி.. திமுக பார்க்குது

இந்நிலையில் ஆளுநர் மாளிகை திருவள்ளுவர் தின அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் இடம்பெற்றதற்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, “ஏற்கனவே திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது சர்ச்சையை கிளப்பியது. மீண்டும் மீண்டும் ஆளுநர் ரவி, இதே சர்ச்சையை கிளப்பினால் என்னதான் செய்ய முடியும். வாதத்துக்கு மருந்து உண்டு, பிடிவாதத்துக்கு மருந்து கிடையாது. நமக்கு கெட்ட நேரம்.. இதுபோன்ற ஆளுநர் நமக்கு வாய்த்துள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அமைச்சர் ரகுபதி, “லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும், அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+