17 மணி நேரம்.. ஓய்வின்றி.. நெஞ்சுவலி வர காரணமே அமலாக்கத்துறை செஞ்ச வேலை தான்: சீறிய அமைச்சர் ரகுபதி!
சென்னை: ஒரு மனிதரை 17 மணி நேரம் விசாரித்தது சட்டத்திற்கு புறம்பானது, செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி வருவதற்கு அடிப்படை காரணமே அமலாக்கத்துறை நடந்துக்கொண்ட விதம் தான் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
அமலாக்கத் துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை நேற்று முன் தினம் நள்ளிரவில் கைது செய்த நிலையில், நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி நேற்று பிற்பகலில் மருத்துவமனைக்குச் சென்று செந்தில்பாலாஜியை சந்தித்த பின்னர், வரும் 2ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து புழல் சிறைக் கைதியாக உள்ள செந்தில்பாலாஜி மருத்துவமனையில் உள்ளார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை எடுத்துள்ள நடவடிக்கை முழுக்க முழுக்க மனித உரிமை மீறல். ஒரு மனிதரை 17 மணி நேரம் விசாரித்தது சட்டத்திற்கு புறம்பானது. அவருக்கு ஓய்வு கொடுத்திருக்க வேண்டும். அவருக்கு ஓய்வு கொடுக்காமல் துன்புறுத்தியுள்ளனர்.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனநிம்மதியை குலைக்கும் விதமாக செயல்பட்டுள்ளனர். இது முழுக்க முழுக்க மனித உரிமைகளை மீறிய செயல். திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கோடு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டும். நெஞ்சுவலி வருவதற்கு அடிப்படை காரணமே அமலாக்கத்துறை நடந்துக்கொண்ட விதம் தான்.
செந்தில் பாலாஜியை வைத்து கொடுமைப்படுத்தினால் மற்ற அனைவரையும் பயப்பட வைக்க நினைக்கிறார்கள். ஆனால் திமுக எதற்கும் பயப்படாது என்று பாஜகவுக்கு தெரியாது. இனிமேல் அமலாக்கத்துறை இதுபோன்று எடுக்கும் நடவடிக்கையை தடுக்க சிபிஐ இனி தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்றுத் தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்று இரவுக்கு பிறகு தான் செந்தில் பாலாஜி சிறை துறையின் கட்டுப்பாட்டில் வந்துள்ளார். சிறைத்துறை விதிப்படி ஒரு நாளுக்கு 3 பேர் மட்டும் தான் மனு அளித்து சந்திக்க முடியும். செந்தில் பாலாஜியின் குடும்பத்தினர் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுகிறோம். சட்டப்போராட்டத்தின் மூலமாக நல்ல தீர்ப்பினை பெற முடியும் என்பதில் நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications