அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை அறுவைச் சிகிச்சை? காவேரி மருத்துவமனையில் என்ன நடக்கிறது?
சென்னை: காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை அறுவைச் சிகிச்சை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகிய நிலையில், இன்னும் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை காவேரி மருத்துவமனை வெளியிடவில்லை.
இதனால் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை அறுவைச் சிகிச்சை நடைபெறுவதற்கான சாத்தியக் கூறு குறைவாகவே தெரிகிறது. அதேபோல் செந்தில்பாலாஜி குறித்த ஹெல்த் ரிப்போர்ட்டும் அவ்வப்போது வெளியாவதில்லை.

என்ன தான் இருந்தாலும் செந்தில்பாலாஜி ஒரு அமைச்சர், ஆகையால் அவரது உடல் நலம் குறித்த அறிக்கையை தினமும் வெளியிட வேண்டிய பொறுப்பு காவேரி மருத்துவமனைக்கு உள்ளது. என்ன மருத்துவம் அளிக்கப்படுகிறது எனத் தெரியாமல் அவரது ஆதரவாளர்கள் தவித்து வருகின்றனர்.
இதனிடையே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி விசாரணைக் கைதியாக இருப்பதால், அவரை பார்ப்பதற்கு காவேரி மருத்துவமனையில் யாருக்கும் அனுமதி தரப்படுவதில்லை. புழல் சிறை போலீஸார் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றிருக்கின்றனர்.
ஜெயலலிதாவும், கருணாநிதியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது என்ன பரபரப்பு நிலவியதோ அதே பரபரப்பு தான் இப்போதும் நீடிக்கிறது. கரூர் மற்றும் கோவையிலிருந்து செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் ஆர்வக்கோளாறில் காவேரி மருத்துவமனைக்கு படையெடுத்து வந்தாலும் அவர்கள் அனைவரும் அதிகபட்சம் லிப்ட் வாசலிலோ, ரிசப்ஷனிலோ தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறார்களாம்.
அதேபோல் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பதற்கென பிரத்யேக மருத்துவக் குழு மட்டும் பணியாற்றி வருகிறது. இதனிடையே அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை அறுவைச் சிகிச்சை செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார்.
இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், வாய்ப்பு இருப்பதாக தான் அவர் கூறுகிறாரே தவிர உறுதியாக நாளை அறுவைச் சிகிச்சை என அவர் தெரிவிக்கவில்லை. இதனிடையே அமலாக்கத்துறையும் எத்தனை நாட்களுக்கு நெஞ்சு வலி இருக்கிறது என பார்ப்போம் என்று செந்தில்பாலாஜியை விட்டுப் பிடிக்கும் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications