டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்தது ஏன்?- எஸ்பி வேலுமணி பரபரப்பு விளக்கம்
சென்னை: டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்தது ஏன் என எஸ்பி வேலுமணி பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பெரும் தோல்வியை அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் சந்தித்தன. கடந்த முறை நடந்த லோக்சபா தேர்தலில் ஜெயலலிதா எந்த கூட்டணியும் இல்லாமல் 37 இடங்களில் தனித்தே வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் தற்போது இரட்டை தலைமை இருப்பதால் முடிவுகள் சரியாக எடுக்கப்படவில்லை என்றும் ஒற்றை தலைமை என்பது அதிமுகவுக்கு வேண்டும் என்றும் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா குரல் கொடுத்தார். இவரது குரலுக்கு சிலர் ஆதரவு தெரிவித்தனர்.

போஸ்டர்
இந்த நிலையில் நேற்றைய தினம் அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னதாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

சலசலப்பு
இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் கடந்த 10-ஆம் தேதி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசினர். இதனால் இவர்களது சந்திப்பு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஓபிஎஸ்- ஈபிஎஸ்
இந்த நிலையில் மத்திய அமைச்சர்களை சந்தித்தது ஏன் என்பது குறித்து அமைச்சர் வேலுமணி பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் சகோதரர்கள் போல் இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார்கள்.

மத்திய அரசு
எதிர்க்கட்சிகள் ஏதாவது நடக்கும் என நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் நினைப்பது நடக்காது. தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை பெறவே டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்தோம். தமிழகத்திற்கு தேவையான குடிநீர் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசிடம் கேட்டுள்ளோம் என்றார் வேலுமணி.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications