Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நம் குடியிருப்பு நம் பொறுப்பு! புதிய செயலியை அறிமுகப்படுத்திய அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்திற்கான புதிய செயலியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சென்னையில் இன்று அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இனி இந்த செயலி மூலமே நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்திற்கான மாத தவணைத் தொகை, பராமரிப்பு தொகை, நிலுவைத் தொகை,போன்றவற்றை செலுத்தலாம் என்பது கூடுதல் தகவல்.

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது;

அமைச்சர் பேச்சு

அமைச்சர் பேச்சு

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புதாரர்கள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தங்களது தவணைகளை எளிய முறையில் செலுத்திட வேண்டும் என்பதற்காக நம்ம குடியிருப்பு என்ற புதிய செயலி இன்றைய தினம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை குடியிருப்புதாரர்கள் தங்களது அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டு வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மாத தவணைத் தொகை, நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்திற்கான பராமரிப்பு தொகை, நிலுவைத் தொகை, போன்றவற்றை செலுத்தலாம்.

 QR code மூலம்

QR code மூலம்

www.tnuhdb.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தொகையினை QR code மூலமாகவும் செலுத்தலாம். நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 417 குடியிருப்போர் நலச்சங்கம் உருவாக்கப்பட்டு 206 குடியிருப்போர் நலச்சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குடியிருப்போர் நலச்சங்கம் பத்திரப்பதிவு துறையில் பதிவிற்கான கட்டணத்தை அரசால் குடியிருப்போர் நலச்சங்கத்திற்கு திருப்பி வழங்கப்படுகிறது.

குடியிருப்போர் நலச்சங்கம்

குடியிருப்போர் நலச்சங்கம்

குடியிருப்போர் நலச்சங்கம் பதிவு செயப்பட்ட பிறகு அதனுடைய வங்கி கணக்கில் 3 மாதத்திற்கான இணை மானியம் அரசால் வழங்கப்படுகிறது. குடியிருப்புகள் சம்மந்தமான குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய 84 சமுதாய பங்களிப்பு உதவியாளர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புதாரர்களின் குடியிருப்பு சம்மந்தமாக மின்தூக்கி, குடிநீர் பிரச்சனை , கழிவுநீர் பிரச்சனை போன்ற குறைகளை நிவர்த்தி செய்ய இப்பணியாளர்கள் மூலம் பதிவேடு பராமரிக்கப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்படுகிறது.

பழுது பார்ப்பு

பழுது பார்ப்பு

மேலும் குடியிருப்புகளுக்கு மற்றும் மனைகளுக்கு கிரையப் பத்திரங்கள் வழங்குவது , அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம் , புதிய மறுகட்டுமான திட்டப்பகுதிகளின் தற்போதைய நிலை , பழுது பார்ப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் அயல்நாட்டு நிதி திட்டங்கள் , பயனாளிகள் தாமாகவே வீடு கட்டும் திட்டம், மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டப்பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது .இதுவரை 3405 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகையாக ரூபாய் 8 கோடியே 17 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+