நம் குடியிருப்பு நம் பொறுப்பு! புதிய செயலியை அறிமுகப்படுத்திய அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
சென்னை: நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்திற்கான புதிய செயலியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சென்னையில் இன்று அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இனி இந்த செயலி மூலமே நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்திற்கான மாத தவணைத் தொகை, பராமரிப்பு தொகை, நிலுவைத் தொகை,போன்றவற்றை செலுத்தலாம் என்பது கூடுதல் தகவல்.
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது;

அமைச்சர் பேச்சு
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புதாரர்கள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தங்களது தவணைகளை எளிய முறையில் செலுத்திட வேண்டும் என்பதற்காக நம்ம குடியிருப்பு என்ற புதிய செயலி இன்றைய தினம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை குடியிருப்புதாரர்கள் தங்களது அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டு வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மாத தவணைத் தொகை, நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்திற்கான பராமரிப்பு தொகை, நிலுவைத் தொகை, போன்றவற்றை செலுத்தலாம்.

QR code மூலம்
www.tnuhdb.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தொகையினை QR code மூலமாகவும் செலுத்தலாம். நம் குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 417 குடியிருப்போர் நலச்சங்கம் உருவாக்கப்பட்டு 206 குடியிருப்போர் நலச்சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குடியிருப்போர் நலச்சங்கம் பத்திரப்பதிவு துறையில் பதிவிற்கான கட்டணத்தை அரசால் குடியிருப்போர் நலச்சங்கத்திற்கு திருப்பி வழங்கப்படுகிறது.

குடியிருப்போர் நலச்சங்கம்
குடியிருப்போர் நலச்சங்கம் பதிவு செயப்பட்ட பிறகு அதனுடைய வங்கி கணக்கில் 3 மாதத்திற்கான இணை மானியம் அரசால் வழங்கப்படுகிறது. குடியிருப்புகள் சம்மந்தமான குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய 84 சமுதாய பங்களிப்பு உதவியாளர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புதாரர்களின் குடியிருப்பு சம்மந்தமாக மின்தூக்கி, குடிநீர் பிரச்சனை , கழிவுநீர் பிரச்சனை போன்ற குறைகளை நிவர்த்தி செய்ய இப்பணியாளர்கள் மூலம் பதிவேடு பராமரிக்கப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்படுகிறது.

பழுது பார்ப்பு
மேலும் குடியிருப்புகளுக்கு மற்றும் மனைகளுக்கு கிரையப் பத்திரங்கள் வழங்குவது , அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம் , புதிய மறுகட்டுமான திட்டப்பகுதிகளின் தற்போதைய நிலை , பழுது பார்ப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் அயல்நாட்டு நிதி திட்டங்கள் , பயனாளிகள் தாமாகவே வீடு கட்டும் திட்டம், மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டப்பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது .இதுவரை 3405 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகையாக ரூபாய் 8 கோடியே 17 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications