"இன்னிக்கு காலைல அழுதுட்டேன்.. யாம் அன்னையும் இலமே” : அமைச்சர் தங்கம் தென்னரசு உருக்கம்!
சென்னை : தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது அம்மா குறித்து நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
சர்வதேச அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலரும் தங்களது அன்னையரை மகிழ்வித்து, இந்நாளைக் கொண்டாடி வருகின்றனர்.
அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தாயார் ராஜாமணி அம்மாள், கடந்த 2020ல் காலமானார். அவரது நினைவாக இன்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் தங்கம் தென்னரசு.

அன்னையர் தினம்
பாலூட்டி, சீராட்டி, நற்பண்புகளைக் கற்றுக்கொடுத்து வளர்க்கும் அன்னையின் சிறப்புகளை, நினைவுகூர்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிறன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. காலை முதல் இரவு வரை பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் அன்னையருக்கு மரியாதை செய்யும் நாள் இன்று. இந்த நாளில் அன்னையரை மகிழ்ச்சிப்படுத்துவது பிள்ளைகளின் வழக்கம்.

அமைச்சர் தங்கம் தென்னரசு
இந்நிலையில், அன்னையர் தினத்தையொட்டி தமிழகத்தின் தொழில்துறை ஆட்சி மொழி, தமிழ் பண்பாட்டுத்துறை மற்றும் தொல்பொருள் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தனது அம்மா குறித்த நினைவுகளை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அவரது நெகிழ்ச்சிகரமான இந்தப் பதிவு வாசிப்போரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
அமைச்சர் தங்கம் தென்னரசு முந்தைய தி.மு.க ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அமைப்பில் பெரும்பங்கு செயலாற்றியவர்.

நெகிழ்ச்சி பதிவு
தனது அம்மா குறித்து தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ள பதிவில், "அம்மாவுக்குச் சில பிடிவாதங்கள் இறுதி வரை
இருந்தன. காலையில் காஃபியை அம்மா தன் கையால் போட்டு, தானே அதை எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு மாடிப்படியாக பைய ஏறி வந்து காஃபி டம்ளரை என் கையில் அவர்கள் தான் கொடுக்கவேண்டும்.
இதில் யாராவது குறுக்கிட்டுவிட்டால் சட்டென்று கோபம் வரும். வயதின் காரணமாக, இதைத் தளர்த்திக் கொண்டு விடுங்களேன் என நான் பலமுறை மன்றாடிய போதெல்லாம் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டது தான் அம்மாவின் ரியாக்ஷன் ஆக இருந்தது.

பாச விளையாட்டு
இதைத் தவிர்க்க நான் சற்று முன்கூட்டியே எழுந்து கீழே வந்து உட்கார ஆரம்பித்தேன். அவர்களோ நான் எழுமுன் காஃபி டம்ளரோடு படியேறி வர ஆரம்பித்தார்.
இந்த விளையாட்டு அம்மா உடல் நலம் குன்றி ஊரிலிருந்து சென்னைக்குச் செல்லும் வரை அனுதினமும் மாறி மாறி நடந்து கொண்டிருந்தது.
என் காலைகள் எப்போதும் அவர்களுடனானதாக கிராமத்தில் விடிந்து கொண்டிருந்த காலம் அது.

கண்ணீர்
இன்று காலை காஃபி அருந்திக்கொண்டிருக்கும் அம்மாவின் புகைப்படம் ஒன்றைத் தற்செயலாகப் பார்த்தபோது கண்களில் நீர் கோர்த்ததை தடுக்க முடியவில்லை. யாம் அன்னையும் இலமே." எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அன்னையர் தின பாசப் பதிவு அதிகமானோரால் பகிரப்பட்டு வருகிறது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications