மே 11 முதல் ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜன் கிடைக்கும்- தங்கம் தென்னரசு
சென்னை: மே 11 ஆம் முதல் ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜன் கிடைக்கும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
தமிழகத்தில் நாளை முதல் முழு முடக்கம் அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, KKSSR ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஸ்டெர்லைட் மூலம் தமிழகத்திற்கு 31 மெ. டன் ஆக்சிஜன் கிடைக்கும். ஸ்டெர்லைட் மூலம் தயாரிக்கப்படும் ஆக்ஸிஜன் வரும் 11 ஆம் தேதி முதல் கிடைக்கும்.
தொழில் துறையினர் மற்றும் வணிகர்களுடன் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முழு ஊரடங்கிற்கு தொழில்துறையினர் ஒத்துழைப்பு தர வேண்டும்.
தனியார் நிறுவனங்களிடம் ஆக்சிஜன உற்பத்திக்காகவும் அதை பெறுவதற்காகவும் அதிகாரிகள் நியமிக்கப்படுவர். தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க தொழிற்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது. வரும் காலகட்டத்தில் ஆக்சிஜன் தேவையை நிவர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications