Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வந்தே பாரத்தை விடுங்க.. மணிக்கு 250 கிமீ வேகம்..! ரெடியாகும் ஹை ஸ்பீடு ட்ரெயின்.. வேற லெவல் பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறனுடன் கொண்ட 2 ரயில்களை வடிவமைக்குமாறு சென்னையில் உள்ள ஐசிஎப்-பிற்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டு இருக்கிறது. இந்த இரண்டு ரயில்களும் 2025 இறுதிக்குள் வடிவமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை அதிவேகம், சொகுசான பயணம் என பயணிகளை கவரும் விதமாக உள்ளது.

Railway Vande Bharat Rail ICF Chennai

வந்தே பாரத் ரயில்: தமிழகத்திலும் சென்னையில் இருந்து கோவை, சென்னை- நெல்லை, கோவை- பெங்களூர், சென்னை - மைசூர் ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுக்க 50-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

250 கி.மீ வேகம்: தொலை தூர பயணிகளுக்கு ஏற்ற விதமாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களையும் இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான முழு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை தயாரிக்கும் பணி சென்னையில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களின் வடிவமைப்பு குறித்த படங்கள் வெளியாகின.

இதனிடையே கடந்த 4 ஆம் தேதி ரயில்வே அமைச்சகத்தில் இருந்து சென்னை ஐசிஎப்பிற்கு கடிதம் ஒன்று எழுதியிருக்கிறது. அதில், மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் 2 ரயில்களை தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாம். இந்த ரயில் முழுக்க முழுக்க ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்பட இருக்கிறது.

8 பெட்டிகள்: அதிகபட்சமாக 250 கி.மீட்ட வேகத்தில் செல்லக் கூடிய வகையில் இந்த ரயில் வடிவமைப்பு இருக்கும். இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "வந்தே பாரத் பிளாட்பார்ம் அடிப்படையில் இந்த புதிய ரயில் இருக்கும். வரும் காலத்தில் வந்தே பாரத் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் திட்டத்தின் ஒரு பார்ட் ஆக இந்த ரயில் இருக்கும்.

எட்டு பெட்டிகள் கொண்டதாக இந்த ரயில்கள் இருக்கும். கடந்த ஒரு ஆண்டு காலமாகவே ராஜஸ்தானில் ஸ்டேண்டர்டு கேஜ் டிராக்குகள் டெவலப் செய்யப்பட்டுள்ளன. அதிவேக ரயில்கள் இயக்கும் திறனை சோதிக்கவும் வந்தே பாரத் ரயில்களை ஏற்றுமதி செய்யவதற்காவும் இது செய்யப்படுகிறது" என்றனர்.

சாத்தியமா?: எனினும், இந்த திட்டம் சவால் மிக்கதாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் வந்தே பாரத் ரயில்களின் டாப் ஸ்பீடு 180 கிலோ மீட்டராக உள்ளது. ஸ்டேண்டர்டு கேஜில் 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயில்களை மார்ச் 2025 - க்குள் தயாரிப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது தான் என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+