அதிகரிக்கும் கொரோனா..தமிழக அரசு துரித நடவடிக்கை.. ஆளுநருடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு
சென்னை: தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், ஊரடங்கு குறித்தும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கினார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 30,000-ஐ கடந்து விட்டது. உயிரிழப்பும் 250-ஐ தாண்டி விட்டது.

தமிழகத்தில் ஊரடங்கு
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறுபவர்களை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தடுப்பு நடவடிக்கை
தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க தேவையான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி பெறுவதற்காக உலகளாவிய டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது. சென்னையில் வார் ரூம் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

முதல்வர் ஆலோசனை
கொரோனா நிவாரண நிதியாக முதற்கட்டமாக ரூ.2,000-ஐ தமிழக அரசு வழங்கி வருகிறது. கொரோனா தடுப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். மேலும் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுடனும் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

ஸ்டாலின் விளக்கினார்
இந்த நிலையில் தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், ஊரடங்கு குறித்தும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கினார். சென்னை கிண்டி ராஜ்பவனில் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த ஸ்டாலின், கொரோனா தடுப்பு பணிகள் குறிதது எடுத்துரைத்தார். அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோரும் ஸ்டாலினுடன் உடன் இருந்தனர்.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications