அருகில் அழைத்து பாராட்டியது இன்னும் நிழலாடுகிறது.. காத்தவராயன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எளிமைக்கு இலக்கணமாம் குடியாத்தம் எம்எல்ஏ எஸ்.காத்தவராயனின் திடீர் மறைவு வேதனை தருகிறது என்று, திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாார்.

நேற்று கே.பி.பி.சாமியையும், இன்று காத்தவராயனையும் பறிகொடுத்திருப்பது எனக்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும், குடும்பத்தினர்,கழகத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்-ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் அவர் கூறியுள்ளார்.

MK Stalin condoles Gudiyatham DMK MLA Kathavarayan

குடியாத்தம் இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற காத்தவராயன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை மரணமடைந்தார்.

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், திமுகவின் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், மாவட்ட பிரதிநிதியாக பணியாற்றிய அவர், தற்போது மாவட்ட துணை செயலாளர். கடைக்கோடி தொண்டரிடமும், கனிவுடன் பழகும் மனிதநேயமிக்க பண்பாளர். தொகுதி பிரச்சினைகளை சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமாக தொகுத்து வாதாடி, அவையில் இருந்தவர்களை எல்லாம் வியக்க வைத்தவர். அவரது வாதத்திறமையை நேரில் கண்ட நான், அவரை என்னருகில் அழைத்து பாராட்டியது இன்றும் என் கண் முன் வந்து நிழலாடுகிறது.

என்னுடன் பணியாற்றி வரும் கழக சட்டமன்ற உறுப்பினர்களில், நேற்று கே.பி.பி.சாமியையும், இன்று காத்தவராயனையும், பறிகொடுத்திருப்பது எனக்கு பேரிழப்பு. இந்த துயரமிகுந்த தருணத்தில், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+