நீட்: சட்டமன்ற தீர்மானத்தையே மதிக்காதவர்கள் அமைச்சரின் கடிதத்தையா மதிக்க போகிறார்கள்?.. ஸ்டாலின்
சென்னை: நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையே மதிக்காதவர்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் எழுதிய கடிதத்தையா மதிக்க போகிறார்கள் என திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 33 லட்சத்தை தாண்டியது. தினந்தோறும் புதிய கேஸ்களின் எண்ணிக்கையில் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் ஜேஇஇ தேர்வு செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையும் நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதியும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாணவர்களும் பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாம் என எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
Recommended Video

முதல்வர்
எனினும் திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அதே நேரத்தில் பாதுகாப்பு அம்சங்கள் முறையாக கடைப்பிடிக்கப்படும் என்றும் தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி நேற்றைய தினம் 7 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

மேற்கு வங்கம்
அப்போது நீட் தேர்வுகளை ஒத்திவைக்க ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து மேற்குவங்கம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர், புதுவை ஆகிய 7 மாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு நீட்டை ரத்து செய்ய வேண்டும்.

பிளஸ் 2 மதிப்பெண்
மருத்துவ படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வலியுறுத்தி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனுக்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

நீட் எதிர்ப்பு
தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில் நீட் எதிர்ப்பு உண்மையெனில் 7 மாநில அரசுகளைப் போல தமிழக அரசும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் என்றேன்! கடிதம் எழுதி இருக்கிறாராம் விஜயபாஸ்கர். சட்டமன்ற தீர்மானத்தையே மதிக்காதவர்கள் இவரின் கடிதத்தையா மதிக்கப் போகிறார்கள்? ஏமாற்றுவதை விடுத்து செய்ய வேண்டியதைச் செய்யுங்கள்.

ஜேஇஇ தேர்வு
நீட், ஜேஇஇ தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரி 7 மாநில முதலமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்திருப்பதை வரவேற்கிறேன். அதற்கான முயற்சியை எடுத்த சோனியா காந்திக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீட் தேர்வை எதிர்ப்பது உண்மையானால் தமிழக அரசும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும்! என ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
நீட், சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகள்.. பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்! தர்மேந்திர பிரதான் உருக்கம்! -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications