நீட் தேர்வுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு அழுத்தம்.. அதிமுகவுக்கு ஸ்டாலின் கோரிக்கை
சென்னை: நீட் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
மருத்துவ படிப்புகளுக்கான நுழைவு தேர்வான நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என நீண்ட கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. எனினும் அதை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.

இந்த நீட் தேர்வினால் அரியலூர் அனிதா உள்ளிட்ட எத்தனையோ மாணவ, மாணவிகள் தற்கொலை முடிவுக்கு சென்றுவிட்டனர். ஆனால் இன்னும் சிலரோ எப்படியாவது மருத்துவம் படிக்க வேண்டும் என்ற பிடிவாதத்தில் ஆள்மாறாட்டம் செய்த செய்திகள் வெளியாகியுள்ளன.
Fake dual nativity ceriticates, faulty translations in question papers, impersonation of candidates - NEET is destroying the dreams of young Indians.
— M.K.Stalin (@mkstalin) September 28, 2019
A high level inquiry into all malpractices must be immediately ordered by the Union Government.@MoHFW_INDIA @PMOIndia https://t.co/lOxELtq3qW
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், போலி இரட்டை இருப்பிட சான்றிதழ், வினாத்தாள்களில் தவறான மொழிபெயர்ப்பு, மாணவர்கள் ஆள்மாறாட்டம் என இளைஞர்களின் கனவுகளை நீட் சிதைக்கிறது.
அனைத்து முறைகேடுகள் குறித்தும் உயர்நிலை குழு விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும். அனிதாவின் மரணத்தில் இழைக்கப்பட்ட அநீதி தொடங்கி அண்மையில் நடந்து வரும் ஆள்மாறாட்ட முறைகேடு வரை நீட் தேர்வு தமிழக மாணவர்களை ஏமாற்றுகிறது. எனவே நீட் தேர்வுக்கு தடை விதிக்க அதிமுக அரசு உடனடியாக மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications