வேளாண் சட்டங்களை எதிர்த்து பட்ஜெட் கூட்டதொடரில் தீர்மானம்.. 9 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
சென்னை: வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் மாநிலங்களுக்கான அதிகாரங்களை நீர்த்து போக செய்யும் முயற்சியை தடுக்க வேண்டும் என்றும் 9 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம், குஜராத், கோவா, மகாராஷ்டிரா, ஒடிசா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நாள் முதல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்.
இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் நலனை கருதி வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
மாநிலங்களுக்கான அதிகாரங்களை நீர்த்து போக செய்யும் முயற்சியை தடுக்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வரும் துறைமுக சட்ட மசோதாவை 3 மாநிலங்களும் எதிர்க்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.