நான்தான் அமமுகவில் இல்லைன்னு சொல்லிட்டேனே.. அப்புறம் ஏன் என்னை கூட்டத்திற்கு கூப்பிடல..எம்எல்ஏ வேதனை
Recommended Video
சென்னை: தான் தற்போது அமமுகவில் இல்லை என்று கூறிய பிறகும் தனக்கு அமமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை என எம்எல்ஏ ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார்.
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத்தொடங்கியுள்ளது. கடந்த வாரம் மதுரை எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கொளுத்தி போட்ட பட்டாசு வெடிக்கத் தொடங்கியது.
அதிமுகவை சேர்ந்த பலரும் கட்சிக்கு ஆளுமை மிக்க ஒற்றை தலைமை வேண்டும் என முழக்கமிட தொடங்கிவிட்டனர். போதாகுறைக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் பொதுச்செயலாளராக பதவியேற்க வேண்டும் என்று ஆங்காங்கே போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர்.

அமைச்சர்கள் ஆப்சென்ட்
இதைத்தொடர்ந்து இன்று அவசர அவசரமாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை இன்று நடத்தியது அதிமுக தலைமை. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் இந்தக்கூட்டத்தில் அமைச்சர்கள் ஓஎஸ் மணியன் மற்றும் சிவி சண்முகம் ஆப்சென்ட்டாகியுள்ளனர்.

மூன்று எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை
அமைச்சர்கள் கூட்டத்தை புறக்கணித்ததற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் அமமுகவுக்கு ஆதராவாக பேசிய மூன்று எம்எல்ஏக்கள், பிரபு, கலைச்செல்வன், மற்றும் ரத்தினசபாபதி ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

என்னை அழைக்கவில்லை
அமமுக ஆதரவு எம்எல்ஏக்கள் மூன்று பேருக்கும் கட்சிக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்நிலையில் இதுகுறித்து பேசிய எம்எல்ஏ ரத்தினசபாபதி, தான் தற்போது அமமுகவில் இல்லை என்று கூறிய பிறகும் தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

சந்தோஷமும் இல்லை
நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காததால் வருத்தமும் இல்லை, சந்தோஷமும் இல்லை என்றும் ரத்தினசபாபதி எம்எல்ஏ தெரிவித்தார். இதேபோல் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படாத எம்எல்ஏ கலைச்செல்வன் கட்சிக்கு ஒற்றைத்தலைமை இல்லாததே அதிமுக தோல்விக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

பலம் பொருந்திய தலைமை
ஒற்றைத்தலைமை இருந்தால் மட்டுமே அதிமுக பலம் பொருந்தியதாக இருக்கும் என்றும் தொண்டர்களும் வாக்காளர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைமை இப்போது அதிமுகவுக்கு தேவைப்படுகிறது என்றும் கலைச்செல்வன் எம்எல்ஏ கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications