ஆளுநர் ரவிக்கு இனி வேறு வழியில்லை! தக்க பாடம் புகட்டிய உச்சநீதிமன்றம்! சபாஷ் போடும் ஜவாஹிருல்லா!
சென்னை: மாநில அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளதாக மனிதநேயமக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் விடுதலை வழக்கு மூலம் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் தக்க பாடம்
புகட்டியுள்ளதாக கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

30 ஆண்டுகளுக்கு
30 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் வாடிய பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கின்றது. நீண்டகாலமாகச் சிறையில் இருக்கக்கூடிய பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அதை அனுப்பிய பிறகு ஆளுநர்
அதுகுறித்து முடிவெடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.
Recommended Video

ஆளுநரின் பணி
இதன் பிறகு இதற்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அதனை அனுப்பி
வைத்தார். இன்று பேரறிவாளனை விடுதலை செய்து வழங்கிய தீர்ப்பில் தமிழ்நாட்டு
ஆளுநரின் இந்த காலதாமதச் செயல் தவறானது என்று குட்டு வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் முடிவுக்கு ஒப்புதல் அளிப்பது மட்டும்தான் ஆளுநரின் பணி
என்பதை இந்தத் தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

20 ஆண்டுக்காலம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மீதமுள்ள ஆறு தமிழர்களும் விடுதலை ஆவதற்கான
ஒருவழிவகை இத்தீர்ப்பின் விளைவாகப் பிறந்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் 20 ஆண்டுக்காலம் சிறையில் உள்ளவர்களை விடுதலை
செய்வதற்குமாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதற்கு ஆளுநர் ஒப்புதல்
அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தனி ஒரு பெண்ணாக
தனி ஒரு பெண்ணாக நீதி கேட்டுப் போராடி அதில் வெற்றி கண்டுள்ள
அற்புதம்மாளுக்கும் 31 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையைச் சுவாசிக்கும்
பேரறிவாளனுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தீர்ப்பிலிருந்து படிப்பினை பெற்று தமிழ்நாட்டு ஆளுநர் தமிழ்நாட்டு
அமைச்சரவையின் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications